ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் |

தமிழில் விஜய் நடித்த ‛பிரியமுடன், யூத்' போன்ற படங்களை இயக்கியவர் வின்சென்ட் செல்வா. தொடர்ந்து ஜித்தன் படத்தையும் இயக்கினார். இவரிடம் தான் மிஷ்கின் உதவி இயக்குனராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக வின்சென்ட் செல்வா இயக்கத்தில் 2016ம் ஆண்டில் தமிழில் விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும் என்ற படத்தை இயக்கினார். அந்தபடம் வரவேற்பை பெறவில்லை. இந்த படத்திற்கு பிறகு எந்தவொரு படத்தையும் இயக்கவில்லை. தற்போது 9 ஆண்டுகளுக்கு பிறகு வின்சென்ட் செல்வா தமிழில் 'சுப்பிரமணி' என்கிற புதிய படத்தை இயக்கவுள்ளார். இதில் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.