ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
சூர்யா நடிப்பில் அடுத்து ரெட்ரோ படம் வெளியாக உள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கி உள்ளார். இதையடுத்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா தனது 45வது படத்தில் நடித்து வருகிறார். திரிஷா நாயகியாக நடிக்க, சுவாசிகா, சிவதா, யோகி பாபு, நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.
பொள்ளாச்சி, சென்னை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. தற்போது 70 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தெரிகிறது. சில நாட்களாக இந்த படத்திற்காக ஈ.சி.ஆரில் பிரமாண்டமான கிராமம் போன்ற அரங்கம் அமைத்து 500 நடன கலைஞர்களுடன் சூர்யா, த்ரிஷா இணைந்து நடனமாடியதை படமாக்கியுள்ளனர். இந்த பாடல் காட்சியை ஷோபி மாஸ்டர் இயக்கியுள்ளார்.