ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
சதாசிவம் சின்னராஜ் என்பவர் எழுதி இயக்கி, நாயகனாக நடித்துள்ள படம், 'இஎம்ஐ- மாதத் தவணை'. காமெடி கலந்த சென்டிமென்ட் படமாக உருவாகியுள்ள இப்படத்தை சபரி புரொடக்ஷன்ஸ் சார்பில் மல்லையன் தயாரித்துள்ளார்.
சாய் தான்யா நாயகியாக நடித்துள்ளார். பேரரசு, பிளாக் பாண்டி, ஆதவன், ஓஏகே சுந்தர், லொள்ளுசபா மனோகர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதன் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ் பேசியதாவது: நான், என் முதல் படத்துக்கு ஒரு மொக்கை கதையைத் தான் வைத்திருந்தேன். ஆனால் உதவி இயக்குனராக வேலை பார்க்க ஆரம்பித்த பிறகு, அதைத் தூக்கிப் போட்டுவிட்டேன். பின் நம் வாழ்க்கையில் இருந்து கதையை எடுப்போம் என கதையை உருவாக்கினேன்.
மலையாளத்தில் அங்கு இங்கு என்று கதைகளை தேடி படம் பண்ண வேண்டும் என்று நினைப்பதில்லை. வாழ்க்கையில் என்ன நடக்கிறதோ அதை வைத்து படம் பண்ணுகிறார்கள். அதனால்தான், சீக்கிரம் படம் எடுக்க முடிகிறது, அதிக செலவில் செட் போட வேண்டியதில்லை, கோடி கணக்கில் செலவிட வேண்டியதும் இல்லாமல் போய்விட்டது. நம் வாழ்க்கையில் இருந்து கதை எடுத்தால் படம் ஜெயிக்கும். 'இஎம்ஐ' எல்லோரும் அனுபவிப்பது தான். இதில் நல்லதும் இருக்கிறது, கெட்டதும் இருக்கிறது. அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். காமெடியோடு கதையைச் சொல்லியிருந்தால் மக்கள் ஆதரிப்பார்கள். இவ்வாறு பேசினார்.