ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
திரையுலகில் நடிகர்கள் துல்கர் சல்மான், பஹத் பாசில் போன்றவர்கள் 15 வருடங்களுக்கு முன்பே தங்களது நடிப்பு பயணத்தை துவங்கி விட்டார்கள். அதேசமயம் மோகன்லாலின் மகன் பிரணவ் தனது திரைப்பயணத்தை லேட்டாக அதுவும் ஒரு உதவி இயக்குனராக துவங்கினாலும், பின்னர் தனது தந்தை வழியில் அவரும் ஒரு நடிகராக மாறிவிட்டார். தொடர்ந்து படங்களில் நடித்து வந்தாலும் இன்னும் துல்கர், பஹத் பாசில் போல திரையுலகிலும் ரசிகர்களிடமும் ஒரு அழுத்தமான இடத்தை அவரால் பெற முடியவில்லை.
சமீபத்தில் மோகன்லால் ஒரு பேட்டியில் கூறும்போது கூட, “என் மகன் இப்போதுதான் பயணிக்க துவங்கியுள்ளார். இன்னும் நீண்ட தூரம் போக வேண்டும்.. நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். அவர் கூறியதற்கு ஏற்றார்போல், நடிப்பை விட தேசாந்திரி போல ஊர் உலகம் சுற்றுவதில் தான் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார் பிரணவ் மோகன்லால்.
அதேசமயம் கடந்த வருடம் 'வர்ஷங்களுக்கு சேஷம்' என்கிற படத்தில் நடித்த பிரணவ் அடுத்ததாக மம்முட்டியை வைத்து பிரம்மயுகம் என்கிற படத்தை இயக்கிய இயக்குனர் ராகுல் சதாசிவன் என்பவர் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் என்று சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கி நடைபெற ஆரம்பித்துள்ளது. பிரம்மயுகம் படம் போல இதுவும் ஹாரர் பின்னணி கொண்ட கதைக்களம் தான் என்று சொல்லப்படுகிறது.