பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு | ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை | மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? | லகான் கிராம மக்களுடன் அமர்ந்து ‛சிதாரே ஜமீன் பர்' படத்தை பார்த்த அமீர்கான் | பிளாஷ்பேக்: காட்சியும், கானமும் “நான் பாடும் பாடல்” | உழைக்கும் கரங்கள், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், பீஸ்ட் - ஞாயிறு திரைப்படங்கள் | சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் |
'சித்தா' படத்தை தொடர்ந்து இயக்குனர் எஸ்யு அருண்குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் 'வீர தீர சூரன்'. இதில் விக்ரம் கதாநாயகனாக, துஷாரா விஜயன் கதாநாயகியாக நடிக்க, எஸ்.ஜே சூர்யா மற்றும் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நாளை மறுநாள் (மார்ச் 27ம் தேதி) இப்படம் வெளியாகிறது.
அதேநாளில், நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நாயகனாக நடிக்கும் 'எல் 2 எம்புரான்' படமும் வெளியாகிறது. மலையாளத்தில் உருவானாலும் பான் இந்தியா வெளியீட்டாக வருவதால் அந்த படத்திற்கும் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்திலும் சுராஜ் வெஞ்சாரமூடு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் 'வீர தீர சூரன்' பட புரமோஷன் நிகழ்ச்சியில் இரு படங்களும் ஒரே நாளில் ரிலீசாவது குறித்து பேசிய சுராஜ் வெஞ்சாரமூடு, ''மார்ச் 27ல் நான் நடித்த இரு படங்களும் ரிலீசாகின்றன. இரு படங்களும் சிறப்பாக வந்துள்ளன. அப்படி பார்க்கையில் அன்றைய தினம் விக்ரமுக்கு ஒரு ஹிட், மோகன்லாலுக்கு ஒரு ஹிட். ஆனால் எனக்கு மட்டும் ரெண்டு ஹிட்'' என்றார்.