கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் |

'சித்தா' படத்தை தொடர்ந்து இயக்குனர் எஸ்யு அருண்குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் 'வீர தீர சூரன்'. இதில் விக்ரம் கதாநாயகனாக, துஷாரா விஜயன் கதாநாயகியாக நடிக்க, எஸ்.ஜே சூர்யா மற்றும் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நாளை மறுநாள் (மார்ச் 27ம் தேதி) இப்படம் வெளியாகிறது.
அதேநாளில், நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நாயகனாக நடிக்கும் 'எல் 2 எம்புரான்' படமும் வெளியாகிறது. மலையாளத்தில் உருவானாலும் பான் இந்தியா வெளியீட்டாக வருவதால் அந்த படத்திற்கும் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்திலும் சுராஜ் வெஞ்சாரமூடு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் 'வீர தீர சூரன்' பட புரமோஷன் நிகழ்ச்சியில் இரு படங்களும் ஒரே நாளில் ரிலீசாவது குறித்து பேசிய சுராஜ் வெஞ்சாரமூடு, ''மார்ச் 27ல் நான் நடித்த இரு படங்களும் ரிலீசாகின்றன. இரு படங்களும் சிறப்பாக வந்துள்ளன. அப்படி பார்க்கையில் அன்றைய தினம் விக்ரமுக்கு ஒரு ஹிட், மோகன்லாலுக்கு ஒரு ஹிட். ஆனால் எனக்கு மட்டும் ரெண்டு ஹிட்'' என்றார்.