தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

1947ம் ஆண்டு தியாகராஜ பாகவதரும், அன்றைய முன்னணி இளம் நடிகையுமான வசுந்தராதேவி ஆகியோர் நடிப்பதாக பிரமாண்டமாக விளம்பரம் செய்யப்பட்டு தொடங்கிய படம் 'உதயணன் வாசவதத்தா'. படத்தை டி.ஆர்.ரகுநாத் இயக்கினார், ஏ.எஸ்.ஏ.சாமி வசனம் எழுதினார். பாபநாசம் சிவன் இசை அமைத்தார்.
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே அனைத்து ஏரியாக்களும் விற்றுத் தீர்ந்தது. 25 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் பாகவதர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் அவருக்கு பதிலாக பாடகர் ஜி.என்.பாலசுப்பிரமணியம் நடித்தார்.
இவருடன் எம்.எஸ்.சரோஜா, டி.பாலசுப்ரமணியம், கே.சாரங்கபாணி, காளி என்.ரத்னம், சி.டி.ராஜகாந்தம், என்.கிருஷ்ணமூர்த்தி, பி.எஸ்.வீரப்பா, டி.கே.சம்பங்கி, எம்.வி.மணி, கொளத்து மணி, வி.நா.ராஜா, டி. கமலம், கே.என்.ராஜம் மற்றும் என்.நாகசுப்ரமணியம் ஆகியோர் நடித்தனர்.
பாகவதர் நடிக்காததால் பல விநியோகஸ்தர்கள் வியாபாரத்தை துண்டித்தனர். அழகான காதல் கதை, ஹாலிவுட் ஒளிப்பதிவாளர் மார்கஸ் பர்ட்லே, வெளியான பாடல்கள் அனைத்தும் ஹிட். ஆனாலும் தியாகராஜா பாகவதர் நடிக்காததால் படம் படுதோல்வி அடைந்தது.