கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் |

ஒரு காலத்தில் வித்தியாசமான படங்களை இயக்கி வந்த ஸ்ரீதர், 80களில் வியாபார நோக்கம் கொண்ட கமர்ஷியல் படங்களை இயக்கினார். காதல், ஆக்ஷன் இந்த இரண்டும் அவரது பார்முலாவாக இருந்தது. அப்படி அவர் இயக்கிய படம்தான் 'துடிக்கும் கரங்கள்'. இந்த படத்தை கே.ஆர்.ஜி தயாரித்திருந்தார்.
ஒரு சில தெலுங்கு படங்களுக்கு இசை அமைத்திருந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை அழைத்து இந்த படத்திற்கு இசை அமைக்கச் சொன்னார். ஆனால் முதலில் அவர் மறுத்தார். காரணம் தயாரிப்பாளர் கேஆர்ஜி சில ஆண்டுகளுக்கு முன்பே 'நீங்கள் இசை அமைத்தால் முதல் படமாக எனது படம் இருக்க வேண்டும்' என்றார். அதற்கு பாலசுப்பிரமணியமும் ஒப்புக் கொண்டிருந்தார். இதை கூறியே அவர் மறுத்தார்.
அப்படியென்றால் இந்த படத்திற்கு கேஆர்ஜியை தயாரிப்பாளராக்கி விடுகிறேன் என்று சொல்ல அப்படியே நடந்து, படம் தயாரானது. ஒரு கொடுமைக்கார எஸ்டேட் முதலாளிக்கும் அங்கு பணியாற்றும் ஊழியருக்கும் இடையிலான மோதல்தான் படத்தின் கதை. ரஜினி, ராதா, ஜெய்சங்கர், சுஜாதா, விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.
படத்தில் 6 பாடல்கள் இடம்பெற்றது. அத்தனை பாடல்களும் ஹிட்டானது. என்றாலும் பாடல்களில் தெலுங்கு வாசனை அடிப்பதாக விமர்சிக்கப்பட்டது. அதன்பிறகு ஒரு சில படங்களுக்கு இசை அமைத்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம், பின்னர் பாடுவதில் மட்டும் கவனம் செலுத்தினார்.