தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

நடிகை சினேகா-பிரசன்னா தம்பதியினர் காதல் திருமணம் செய்து கொண்டு இனிய இல்லறம் நடத்தி வருகின்றனர். சில நட்சத்திர தம்பதிகளை போல இவர்களுக்கும் கருத்து வேறுபாடு, பிரிவு என்பது போன்று சில வதந்திகள் அவ்வப்போது வெளியானாலும் அவற்றையெல்லாம் புறந்தள்ளி ஒதுக்கிவிட்டு ஆதர்ச தம்பதிகளாக வலம் வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரரை தரிசிக்க சென்ற இவர்கள் அங்கிருந்து கிரிவலம் பாதையில் வலம் வந்துள்ளனர்.
அதேசமயம் அப்படி அவர்கள் கிரிவல பாதையில் நடந்த போது கால்களில் செருப்பு அணிந்து நடந்து சென்றதும் செருப்பை அணிந்தபடியே அங்கே தேங்காய் உடைத்தது, பிரார்த்தனை செய்தது என அவர்கள் நடந்து கொண்டதும் தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது. இப்படி புனித தலமான திருவண்ணாமலைய கிரிவலப் பாதையில் செருப்பு அணிந்து செல்லலாமா என்று நெட்டிசன்கள் பலரும் தங்களது கடுமையான விமர்சனத்தை தெரிவித்து வருகின்றனர்.