ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகை சினேகா-பிரசன்னா தம்பதியினர் காதல் திருமணம் செய்து கொண்டு இனிய இல்லறம் நடத்தி வருகின்றனர். சில நட்சத்திர தம்பதிகளை போல இவர்களுக்கும் கருத்து வேறுபாடு, பிரிவு என்பது போன்று சில வதந்திகள் அவ்வப்போது வெளியானாலும் அவற்றையெல்லாம் புறந்தள்ளி ஒதுக்கிவிட்டு ஆதர்ச தம்பதிகளாக வலம் வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரரை தரிசிக்க சென்ற இவர்கள் அங்கிருந்து கிரிவலம் பாதையில் வலம் வந்துள்ளனர்.
அதேசமயம் அப்படி அவர்கள் கிரிவல பாதையில் நடந்த போது கால்களில் செருப்பு அணிந்து நடந்து சென்றதும் செருப்பை அணிந்தபடியே அங்கே தேங்காய் உடைத்தது, பிரார்த்தனை செய்தது என அவர்கள் நடந்து கொண்டதும் தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது. இப்படி புனித தலமான திருவண்ணாமலைய கிரிவலப் பாதையில் செருப்பு அணிந்து செல்லலாமா என்று நெட்டிசன்கள் பலரும் தங்களது கடுமையான விமர்சனத்தை தெரிவித்து வருகின்றனர்.