ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மோகன்லால், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த மலையாளப் படம் 'எல் 2 எம்புரான்'. படத்தில் இடம் பெற்ற சில காட்சிகள் ஹிந்துக்களின் மனதைப் புண்படுத்துவதாக இருந்தது என சர்ச்சை எழுந்தது. அது குறித்து வருத்தம் தெரிவித்த மோகன்லால் அக்காட்சிகளை நீக்குவோம் என உறுதியளித்தார். அதன்பின் அக்காட்சிகள் நீக்கப்பட்டு மறு தணிக்கை செய்து நேற்று முதல் அது திரையிடப்பட்டது.
இதனிடையே, இப்படம் தற்போது 200 கோடி வசூலைக் கடந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. “தடைகளை உடைத்தெறிந்து 200 கோடியை வசூலித்து, 'எம்புரான்' வரலாறு படைத்துள்ளது,” என மோகன்லால் குறிப்பிட்டுள்ளார்.
ஐந்து நாட்களுக்குள்ளாகவே இந்த சாதனையைப் படைத்துள்ளது. 200 கோடி வசூலைக் கடந்துள்ள இரண்டாவது மலையாளப் படம் இது. இதற்கு முன்னதாக கடந்த வருடம் வெளிவந்த 'மஞ்சுமெல் பாய்ஸ்' படம் 250 கோடி வசூலித்து முதலிடத்தில் உள்ளது. அந்த சாதனையை 'எல் 2 எம்புரான்' முறியடிக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.