தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

மோகன்லால், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த மலையாளப் படம் 'எல் 2 எம்புரான்'. படத்தில் இடம் பெற்ற சில காட்சிகள் ஹிந்துக்களின் மனதைப் புண்படுத்துவதாக இருந்தது என சர்ச்சை எழுந்தது. அது குறித்து வருத்தம் தெரிவித்த மோகன்லால் அக்காட்சிகளை நீக்குவோம் என உறுதியளித்தார். அதன்பின் அக்காட்சிகள் நீக்கப்பட்டு மறு தணிக்கை செய்து நேற்று முதல் அது திரையிடப்பட்டது.
இதனிடையே, இப்படம் தற்போது 200 கோடி வசூலைக் கடந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. “தடைகளை உடைத்தெறிந்து 200 கோடியை வசூலித்து, 'எம்புரான்' வரலாறு படைத்துள்ளது,” என மோகன்லால் குறிப்பிட்டுள்ளார்.
ஐந்து நாட்களுக்குள்ளாகவே இந்த சாதனையைப் படைத்துள்ளது. 200 கோடி வசூலைக் கடந்துள்ள இரண்டாவது மலையாளப் படம் இது. இதற்கு முன்னதாக கடந்த வருடம் வெளிவந்த 'மஞ்சுமெல் பாய்ஸ்' படம் 250 கோடி வசூலித்து முதலிடத்தில் உள்ளது. அந்த சாதனையை 'எல் 2 எம்புரான்' முறியடிக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.