ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
எம்ஜிஆரும், கருணாநிதியும் சினிமாவில் இணைந்து பயணித்தபோது புராண படங்களிலும், பக்தி படங்களிலும் பணியாற்றாமல் இருந்தார்கள். ஆனால் எம்ஜிஆர் தனது ஆரம்ப காலத்தில் சில புராண கேரக்டர்களில் நடித்தார். கருணாநிதி வசனம் எழுத எம்ஜிஆர் நடித்த ஒரே புராண படம் 'அபிமன்யூ'.
ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படத்தில் எம்ஜிஆர் அர்ச்சுணனாக நடித்தார். அதாவது அபிமன்யூவின் தந்தை. அவரது கேரக்டர் சிறியதுதான் அபிமன்யூவாக டைட்டில் கேரக்டரில் நடித்தவர் எஸ்.எம்.குமரேசன். ஆனால் இந்த படத்திற்கு பிறகு அவர் பெரிதாக நடிக்கவில்லை. இந்த படத்திற்காக ஏராளமான விருதுகளை பெற்றார். இவர்கள் தவிர யு.ஆர். ஜீவரத்னம், பி.வி. நரசிம்ம பாரதி, மாலதி, எம்.ஆர். சந்தானலட்சுமி, எம்.ஜி. சக்ரபாணி, எம்.என். நம்பியார் மற்றும் எம்.எஸ்.எஸ். பாக்யம் உள்ளிட்ட பலர் நடித்தனர்.
கருணாநிதியும் அவரது வசன குருநாதர் ஏ.எஸ்.ஏ.சாமியும் இணைந்து படத்திற்கு வசனம் எழுதினார். அர்ச்சுணன் மகன் அபிமன்யூ இறந்து கிடக்கும்போது அர்ச்சுணன் 'என் தமிழ் மகனே' என்று அழுத காட்சி சர்ச்சை ஆனது. இந்த படத்தில் கருணாநிதி வசனம் எழுத வாங்கிய சம்பளம் 230 ரூபாய். படம் பெரிய வெற்றி பெற்றது. படத்தை எம். சோமசுந்தரம், ஏ. காசிலிங்கம் ஆகியோர் இயக்கி இருந்தனர்.