சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
பிரிட்டிஷ் - இந்திய திரைப்பட இயக்குனர் சந்தியா சூரி இயக்கிய 'சந்தோஷ்' திரைப்படம் ஆஸ்கர் விருதுக்காக, இங்கிலாந்து சார்பாக பரிந்துரை செய்யப்பட்ட திரைப்படம். இப்படம் கடந்த வருடத்தில் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு வரவேற்பைப் பெற்றது.
அப்படத்தை இந்தியாவில் திரையிடுவதற்காக தணிக்கைக்கு விண்ணப்பித்து இருந்தனர். ஆனால், படத்தில் உள்ள சில பல வசனங்கள், காட்சிகளை நீக்க வேண்டுமென தணிக்கைத் துறையினர் தெரிவித்துள்ளனர். ஆனால், அதை நீக்க மறுத்துள்ளார் இயக்குனர். எனவே, படத்தை இந்தியாவில் வெளியிட தணிக்கை வாரியம் தடை விதித்துள்ளது.
அப்படி தடை விதிக்கப்பட்ட 'சந்தோஷ்' திரைப்படத்தை சென்னையில் இன்று ஆரம்பமாகும் பி.கே.ரோஸி திரைப்பட விழாவில் ஏப்ரல் 6ம் தேதி காலை 9 மணிக்கு திரையிட உள்ளதாக அறிவித்துள்ளார்கள். இயக்குனர் பா ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் இந்தத் திரைப்பட விழாவை நடத்துகிறது.
இந்தியாவில் திரையிட அனுமதி மறுக்கப்பட்டுள்ள ஒரு திரைப்படத்தை திரைப்பட விழாக்களில் மட்டும் திரையிட அனுமதித்துள்ளார்களா என்ற சர்ச்சை தற்போது எழுந்துள்ளது.