சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
ஒரு காலத்தில் வெள்ளிவிழா இயக்குனராக இருந்த டி.ராஜேந்தருக்கு தொடக்கம் முதலே நடிகராகும் ஆசை இருந்தது. ஒரு தலை ராகம் படத்தில் சந்திரசேகர் நடித்த கேரக்டரில் அவர்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் தயாரிப்பாளருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அவர் நடிக்கவில்லை. அதோடு தனது முகத்தை ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்ற தயக்கமும் இருந்தது. என்றாலும் தனது படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் தலைகாட்டி வந்தார்.
இந்த நிலையில்தான் 'உயிருள்ளவரை உஷா' படத்தை தயாரித்து, இயக்கினார். இந்த படத்தில் காதலர்களுக்கு உதவும் நல்ல தாதாவாக 'செயின் ஜெயபால்' என்ற கேரக்டரை வலுவாக எழுதியிருந்தார். இந்த கேரக்டரில் ரஜினி நடித்தால் நன்றாக இருக்கும் என்று அவருக்கு தோன்றவே ரஜினியை சந்தித்து கதை சொன்னார். அதோடு தேவைப்பட்டால் செயின் ஜெயபால் கேரக்டரை இன்னும் பெரிதாக்கி படத்திற்கு 'செயின் ஜெயபால்' என்றே டைட்டில் வைப்பதாக கூறினார். ஆனால் ரஜினி நடிக்க மறுத்து விட்டார். டி.ராஜேந்தர் எழுதும் அடுக்குமொழி வசனத்தை தன்னால் பேச முடியாது என்று கருதி தவிர்த்தாகவும் கூறுவார்கள்.
அதன்பிறகு அந்த கேரக்டரில் டி.ராஜேந்தரே நடித்தார். முதன்முதலில் டி ராஜேந்தர் முதன்மை கேரக்டரில் நடித்த படம் இது. படமும் பெரிய வெற்றி பெற்றது. ஜெயின் ஜெயபால் கேரக்டரும் பேசப்பட்டது. அதன்பின் தொடர்ந்து நடிக்கவும் தொடங்கினார்.