ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சசிகுமார் தற்போது நடித்து வரும் படம் 'டூரிஸ்ட் பேமிலி'. இதில் அவருக்கு மனைவியாக சிம்ரன் நடிக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், குமரவேல் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். மில்லியன் டாலர் ஸ்டூடியோ சார்பில் யுவராஜ் கணேசன், எம்ஆர்பி எண்டர்டெயின்மென்ட் சார்பில் மகேஷ் ராஜ் தயாரிக்கிறார். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஷான் ரோல்டன் இசை அமைக்கிறார். புதுமுகம் அபிஷன் ஜீவந்த் இயக்குகிறார்.
இந்த படத்தில் சசிகுமார் இரண்டு மகன்களுக்கு தந்தையாக நடிக்கிறார். மகன்களாக மலையாளத்தில் பெரிய ஹிட்டான 'ஆவேஷம்' படத்தில் நடித்த மிதுனும், கமலேஷும் மகன்களாக நடிக்கிறார்கள்.
படம் பற்றி சசிகுமார் கூறியிருப்பதாவது : இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியைச் சமாளிக்க முடியாமல் அங்கிருந்து வந்து சென்னையில் குடியேறும் ஒரு ஈழத் தமிழர் குடும்பம், அந்த ஏரியாவே விரும்பும் ஓர் குடும்பமாக எப்படி மாறுகிறது என்பதுதான் கதை.
ஈழத் தமிழர்கள் என்றால் அவர்கள் பட்ட கஷ்டத்தையும் வலியையும் பற்றித்தான் பேசுவார்கள். இதில் அவர்கள் கஷ்டத்தை எவ்வளவு தூரம் சந்தோஷமாக மாற்றிக்கொண்டு வாழ்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறோம். கதை சொல்லும்போதே 16 வயதுப் பையனுக்கும் ஒரு சின்னப் பையனுக்கும் தகப்பன்னு தெரியும். கதையைச் சொல்லும்போதே தைரியமாக இருந்தேன்.
நிச்சயமாக இந்தக் கதையை இன்னொரு ஹீரோ கிட்டே சொல்ல முடியாது. இதில் நான்தான் நடிக்கணும். இப்ப இருக்கிற தமிழ் சினிமாவில் 16 வயதுப் பையனுக்கு அப்பாவா ரெண்டு, மூணு பேரைத் தவிர யாரும் நடிக்க மாட்டாங்க. அவங்களுக்கு 25 வயதில் பையன்கூட இருப்பாங்க. இருந்தாலும் அப்பாவா நடிக்கமாட்டாங்க.
இந்த கதையும் சில ஹீரோக்களிடம் சொல்லப்பட்டு பிறகுதான் என்னிடம் வந்தது. நான் நடிக்கத் தயார்னு சொன்னேன். இங்கே கதை தான் முக்கியம். சமீபகாலத்தில், அழகாய் சொன்ன விதத்தில் முழுத் திருப்தியாகக் கேட்டது இந்தக் கதைதான். என்கிறார் சசிகுமார்.