தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

கடந்த 2022-ல் மம்முட்டி பார்வதி முதன்முறையாக இணைந்து நடித்த புழு என்கிற திரைப்படம் மலையாளத்தில் வெளியானது. பெண் இயக்குனரான ரதீனா என்பவர் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். ஆணவக் கொலையை மையப்படுத்தி இந்த படம் உருவாகி இருந்தது. மம்முட்டி நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனாலேயே இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெற தவறியது. இந்த நிலையில் இந்த படத்தின் இயக்குனர் ரதீனா தனது கணவரிடம் இருந்து அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்று விட்டதாக தற்போது தனது சோசியல் மீடியா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பலரும் நேற்று முதல் என்னை நீங்கள் விவாகரத்து பெற்று விட்டீர்களாமே என்று கேள்வி மேல் கேள்வியாக கேட்டு வருகிறார்கள். ஆமாம்.. அதிகாரப்பூர்வமாக நான் விவாகரத்து பெற்று விட்டேன்.. அதன் சான்றிதழ்கள் என்னுடைய வழக்கறிஞர் சாந்தியிடம் இருக்கிறது.. வேண்டுமென்றால் அதையும் வாங்கி உங்களுக்காக பதிவிடுகிறேன்.. போதுமா..? ஏன் யாரேனும் என்னை மீண்டும் திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்துடன் இருக்கிறீர்களா ? சாரி.. எனக்கு அதில் ஆர்வம் இல்லை” என்று கொஞ்சம் நக்கலுடன் பதிவிட்டுள்ளார் ரதீனா.
சில வருடங்களுக்கு முன்பு சர்ஷாத் பணியன்டி என்பவருடன் ரதீனாவுக்கு திருமணம் நடைபெற்றது. புழு திரைப்படம் வெளியான பின்பு சில நாட்கள் கழித்து ஆணவக்கொலை சம்பந்தப்பட்ட இந்த படத்தில் மம்முட்டி எப்படி நடிக்க ஒப்புக்கொண்டார். அவர் ஒருவேளை இந்த கதையை கேட்டாரா இல்லையா., இந்த கதையில் நடித்ததன் மூலம் உயர் சாதியை சேர்ந்தவர்கள் மோசமானவர்கள் என்று மம்முட்டி சொல்லி இருக்கிறாரா என்பது போன்று கேள்விகளை எழுப்பி சர்ச்சையை கிளப்பியவர் தான் இவர். அப்போது இருந்தே கணவன் மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்பட்ட நிலையில் தற்போது இந்த விவாகரத்து அதை உறுதி செய்துள்ளது.