சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
சென்னை : சென்னையில் கார் பார்க்கிங் பிரச்னையால் நீதிபதி மகனுடன் கைகலப்பில் ஈடுபட்ட பிகபாஸ் பிரபலம் நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டார்.
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தர்ஷன், கூகுள் குட்டப்பா படத்தின் மூலம் சினிமாவிலும் அறிமுகமானார். சென்னை முகப்பேர் அருகே தர்ஷன் குடியிருக்கும் வீட்டின் அருகே டீக்கடை ஒன்று இருந்துள்ளது. இந்தக் கடையில் உயர்நீதிமன்ற நீதிபதியின் மகன் ஆதிசுடி, நேற்று இரவு, தன் தோழியுடன் டீ குடிப்பதற்காக, காரில் சென்றார்.
தர்ஷனின் வீட்டு முன்பு காரை நிறுத்தி விட்டுச் சென்றுள்ளனர். அப்போது, காரை எடுக்குமாறு தர்ஷன் கூறியுள்ளார். இதனால், அவருக்கும், ஐகோர்ட் நீதிபதியின் மகனுக்கும் தகராறு ஏற்பட்டு, கைகலப்பாக மாறியுள்ளது. இதில், நீதிபதியின் மகன் மற்றும் அந்தப் பெண் காயமடைந்தனர். இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இது தொடர்பாக ஜெ.ஜெ., நகர் போலீஸ் ஸ்டேஷனில் நீதிபதி மகன் புகார் அளித்தார். நடிகர் தர்ஷன் தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டது. இரு தரப்பு புகாரையும் ஏற்றுக் கொண்ட போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், நடிகர் தர்ஷனை போலீசார் கைது செய்துள்ளனர். நீதிபதியின் மகன், அவரது தோழியை தாக்கியதாக பெண் வன்கொடுமை உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.