ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார், த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், சுனில் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் குட் பேட் அக்லி. இந்த படம் இன்று திரைக்கு வந்து அஜித் ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதோடு பிரபலங்களும் இந்த படம் வெற்றி பெற வாழ்த்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்று நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் மீடியாக்களை சந்தித்தார். அப்போது அவரிடத்தில், குட் பேட் அக்லி படம் குறித்து நிருபர்கள் கேள்வி கேட்டபோது, குட் பேட் அக்லி படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று தெரிவித்தார் . அதோடு கூலி படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்டப் பணிகள் நடக்கிறது. இந்த படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகிறது. ஜெயிலர்-2 படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்று கூறிய ரஜினிகாந்த் , மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி ஆனந்தன் ஒரு தூய்மையான அரசியல்வாதி. ரொம்ப நல்ல மனிதர். அவரது குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் கூறினார்.