சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
இளையராஜா, பாரதிராஜாவுக்கு நெருக்கமாக இருந்த தயாரிப்பாளர் கலைமணி. அவர் பாரதிராஜாவின் உதவியாளர் மணிவண்ணணை கொண்டு ஒரு படம் தயாரிக்க விரும்பினார். கோபிசெட்டி பாளையத்தை பின்னணியாக கொண்டு ஒரு காதல் கதையை இயக்கித் தருமாரு அவர் மணிவண்ணனிடம் கேட்டார். அவரும் ஒரு கதையை தயார் செய்தார்.
அந்த கதையை இளையராஜாவிடம் கொடுத்து அதற்கு பாடல்கள் தருமாறு கேட்டார் தயாரிப்பாளர் கலைமணி. ஆனால் இளையராஜா அப்போது ரொம்பவே பிசியாக இருந்ததால் அவரால் குறிப்பிட்ட காலத்திற்குள் பாடலை கொடுக்க முடியவில்லை. ஒரு நாள் கலைமணியை அழைத்த இளையராஜா, "நான் சில தயாரிப்பாளர்களுக்கு கொடுத்த சில பாடல்களை அவர்கள் தங்கள் படத்தில் பயன்படுத்தவில்லை. அதை நீங்கள் கேட்டு வாங்கி பயன்படுத்திக் கொள்ளுங்கள்" என்று கூறிவிட்டார்.
இதை தொடர்ந்து நான்கைந்து தயாரிப்பாளர்களிடம் இருந்த பயன்படுத்தப்படாத 7 பாடல்களின் உரிமங்களை வாங்கி, அதை மணிவண்ணனிடம் கொடுத்து இந்த பாடல்களுக்கு ஏற்ப ஒரு கதை எழுதுங்கள் என்றார். அப்படி எழுதப்பட்ட கதைதான் 'இங்கேயும் ஒரு கங்கை'.
இந்த படத்தில் முரளி, கன்னட நடிகை தாரா, சந்திரசேகர், ஜனகராஜ், வினு சக்ரவர்த்தி, ஒய்.விஜயா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். சோலை புஷ்பங்களே சோகம் சொல்லுங்களேன், ஒரு வில்ல வளைச்சு, ஆனந்த நெஞ்சம், சந்தன கிளியே, ஆட்டம்தான், தெற்கு தெரு மச்சானே என அனைத்து பாடல்களும் ஹிட்டானது. படம் சுமாரன வரவேற்பை பெற்றது.