தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

இளையராஜா, பாரதிராஜாவுக்கு நெருக்கமாக இருந்த தயாரிப்பாளர் கலைமணி. அவர் பாரதிராஜாவின் உதவியாளர் மணிவண்ணணை கொண்டு ஒரு படம் தயாரிக்க விரும்பினார். கோபிசெட்டி பாளையத்தை பின்னணியாக கொண்டு ஒரு காதல் கதையை இயக்கித் தருமாரு அவர் மணிவண்ணனிடம் கேட்டார். அவரும் ஒரு கதையை தயார் செய்தார்.
அந்த கதையை இளையராஜாவிடம் கொடுத்து அதற்கு பாடல்கள் தருமாறு கேட்டார் தயாரிப்பாளர் கலைமணி. ஆனால் இளையராஜா அப்போது ரொம்பவே பிசியாக இருந்ததால் அவரால் குறிப்பிட்ட காலத்திற்குள் பாடலை கொடுக்க முடியவில்லை. ஒரு நாள் கலைமணியை அழைத்த இளையராஜா, "நான் சில தயாரிப்பாளர்களுக்கு கொடுத்த சில பாடல்களை அவர்கள் தங்கள் படத்தில் பயன்படுத்தவில்லை. அதை நீங்கள் கேட்டு வாங்கி பயன்படுத்திக் கொள்ளுங்கள்" என்று கூறிவிட்டார்.
இதை தொடர்ந்து நான்கைந்து தயாரிப்பாளர்களிடம் இருந்த பயன்படுத்தப்படாத 7 பாடல்களின் உரிமங்களை வாங்கி, அதை மணிவண்ணனிடம் கொடுத்து இந்த பாடல்களுக்கு ஏற்ப ஒரு கதை எழுதுங்கள் என்றார். அப்படி எழுதப்பட்ட கதைதான் 'இங்கேயும் ஒரு கங்கை'.
இந்த படத்தில் முரளி, கன்னட நடிகை தாரா, சந்திரசேகர், ஜனகராஜ், வினு சக்ரவர்த்தி, ஒய்.விஜயா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். சோலை புஷ்பங்களே சோகம் சொல்லுங்களேன், ஒரு வில்ல வளைச்சு, ஆனந்த நெஞ்சம், சந்தன கிளியே, ஆட்டம்தான், தெற்கு தெரு மச்சானே என அனைத்து பாடல்களும் ஹிட்டானது. படம் சுமாரன வரவேற்பை பெற்றது.