ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான ‛குட் பேட் அக்லி' திரைப்படத்தில் சில இளம் நட்சத்திரங்கள் பெரிய அளவில் வெளிச்சம் பெற்றுள்ளனர். ஏற்கனவே மலையாளத்தில் பிரபலமான பிரியா பிரகாஷ் வாரியர் அதில் ஒருவர், அதேபோல அஜித், திரிஷா தம்பதியின் மகனாக நடித்திருந்த கார்த்திகேயா தேவ் படம் முழுவதும் வரும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளார். இவர் ஏற்கனவே பிரபாஸின் ‛சலார்' திரைப்படத்தில் சிறு வயது பிரித்விராஜாக நடித்தவர். அந்த படத்தின் மூலம் கிடைத்த வாய்ப்பாக பிரித்விராஜ் இயக்கத்தில் உருவாகி சமீபத்தில் வெளியான ‛எம்புரான்' படத்திலும் ஜூனியர் பிரித்விராஜ் ஆக நடித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது அஜித் படம் மூலம் இன்னும் பிரபலம் அடைந்துள்ளார் கார்த்திகேயா தேவ். அதே சமயம் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக முதலில் தேர்வு செய்யப்பட்டவர் கடந்த வருடம் வெளியாகி வரவேற்பை பெற்ற ‛பிரேமலு' படத்தில் கதாநாயகனாக நடித்த நஸ்லேன் தான். ஆனால் அவரால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது. அவர் கதாநாயகனாக நடித்திருக்கும் ‛ஆலப்புழா ஜிம்கானா' திரைப்படமும் இதே ஏப்ரல் பத்தாம் தேதி வெளியாகி வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது.
இது பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் நஸ்லேன் கூறும்போது, “குட் பேட் அக்லியில் அஜித்தின் மகனாக நடிக்கும்படி ஆதிக் ரவிச்சந்திரன் என்னை அணுகினார். எனக்கு மிகப்பெரிய வாய்ப்பு அது. ஆனாலும் அது பெரிய படம். இரண்டு ஷெட்யூலாக அதிக நாட்கள் எடுக்கப்பட இருந்தது. அந்த சமயத்தில் தான் ஆலப்புழா ஜிம்கானா படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு இருந்தேன். அதனால் குட் பேட் அக்லி படத்திற்கு தேதிகள் ஒதுக்க முடியாத நிலை ஏற்பட்டது. என்னை தேடி வந்த அஜித் பட வாய்ப்பை நான் மிஸ் பண்ணி விட்டேன்” என்று தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.