ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
90களில் முன்னணி நடிகையாக வலம்வந்தவர் சிம்ரன். பல படங்களில் நாயகியாக நடித்தாலும், இவரது நடன அசைவுக்கு பலரும் ரசிகர்களாக இருந்தனர். சில படங்களில் கதாநாயகியாக இருந்தாலும் குழந்தைக்கு தாய் போன்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். குறித்தாக ‛கன்னத்தில் முத்தமிட்டாள்' படத்தில் இவரது நடிப்பு வரவேற்பை பெற்றிருந்தது. சமீபத்தில் அஜித் நடித்த ‛குட் பேட் அக்லி' படத்தில் சிறப்பு தோற்றத்திலும் நடித்து பாராட்டை பெற்றார். தற்போது நடிகர் சசிகுமாருடன் ‛டூரிஸ்ட் பேமிலி' படத்திலும் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக லோகேஷ் குமார் இயக்கி வரும் ‛தி லாஸ்ட் ஒன்' படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தனியார் விருது விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற சிம்ரன் பேசியதாவது: சமீபத்தில் சக நடிகையிடம் ஒருவரிடம் ஏன் இந்தப் படத்தில் நடித்தீர்கள் என ஆச்சரியமாகக் கேட்டேன். அதற்கு உடனடியாக, 'உங்களைப் போல ஆன்டி கதாபாத்திரங்களில் நடிப்பதைவிட இது சிறந்தது' என அவரிடமிருந்து பதில் வந்தது. அந்த பதில் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இவ்வளவு புரிதலற்ற பதிலை எதிர்பார்க்கவில்லை. இதைவிடவும் நல்ல பதில் எனக்குக் கிடைத்திருக்கலாம்.
நான் 25 வயதிலேயே முக்கியமான 'ஆன்டி' கதாபாத்திரத்தமாக ‛கன்னத்தில் முத்தமிட்டாள்' படத்தில் நடித்துள்ளேன். ‛டப்பா' கதாபாத்திரங்களில் நடிப்பதைவிட முக்கியமான 'ஆன்டி' கதாபாத்திரத்தில் நடிக்கலாம்'' என காட்டமாக பேசினார் சிம்ரன். அவர் குறிப்பிட்ட அந்த நடிகை யாராக இருக்கும் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலவிதமான கருத்துகளை கூறி வருகின்றனர்.