ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தெலுங்கு நடிகர் நாக சைதன்யா, நடிகை சமந்தா இருவரும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டு, பின்னர் பிரிந்தார்கள். நாக சைதன்யா, 'பொன்னியின் செல்வன்' நடிகை சோபிதா துலிபலாவை அடுத்து திருமணம் செய்து கொண்டார்.
நடிகை சமந்தாவுக்கும், 'த பேமிலி மேன், சிட்டாடல்' ஆகிய வெப் தொடர்களை இயக்கிய ராஜ் நிடிமோரு இருவருக்கும் காதல் என்று கடந்த சில மாதங்களாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. அத்தொடர்களில் நடிக்கும் போது சமந்தாவுக்கும், ராஜுவுக்கும் காதல் மலர்ந்ததாகச் சொல்கிறார்கள். சமீபத்தில் இருவரும் சில இடங்களுக்கு ஒன்றாகவே சென்றார்கள்.
இதனிடையே, தற்போது திருப்பதிக்கு இருவரும் இணைந்து சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்கள். அடுத்து காளஹஸ்தி கோயிலுக்குச் சென்று ராகு, கேது பூஜையையும் சமந்தா செய்துள்ளார்.
கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் இந்து மதத்தின் மீது தீவிர ஈடுபாடு கொண்டவர் சமந்தா. வட இந்தியாவில் உள்ள கோவில்கள், தமிழகத்தில் பழனி கோவில், இதற்கு முன்பும் திருப்பதிற்கு பல முறை என சென்று வந்துள்ளார்.
சமந்தா, ராஜு விரைவில் திருமணம் செய்து கொள்ளவே தற்போதைய பூஜைகள் என்கிறார்கள்.