சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
'கங்குவா' படத்தின் அதிர்ச்சி தோல்விக்கு பிறகு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் படம் 'ரெட்ரோ'. அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கும் இந்த படம் காதல் கலந்த கேங்ஸ்டர் கதையில் உருவாகி உள்ளது. வருகிற மே ஒன்றாம் தேதி திரைக்கு வரும் இந்த ரெட்ரோ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
இப்படியான நிலையில், சூர்யாவும், ஜோதிகாவும் மஹாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் அமைந்துள்ள மகாலட்சுமி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்கள். அப்போது தனது நெற்றில் குங்குமப் பொட்டு வைத்து, கழுத்தில் மாலை அணிந்த நிலையில் அந்த கோவில் கொடி கம்பத்தில் ஒரு மணியை கட்டுகிறார் ஜோதிகா. இன்னொரு புகைப்படத்தில் அவர் நெய் விளக்கு ஏற்ற, அருகில் சூர்யா நின்று கொண்டிருக்கிறார். இதேபோல் அந்த கோவிலில் பல இடங்களில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் பகிர்ந்து இருக்கிறார் ஜோதிகா.