ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தமிழ் சினிமாவின் ஆரம்ப காலங்களில் மகாபாரதம், ராமாயணத்தில் வரும் சம்பவங்கள், கதாபாத்திரங்களை மையமாக கொண்டு அதிக படங்கள் வந்தன. அதன்பிறகு கடவுளின் அடியார்களான நாயன்மார்கள், குருக்கள் பற்றிய படங்கள் வந்தன. இதன் அடுத்த கட்டமாக வந்ததுதான் உள்ளூர் குல தெய்வங்களின் கதைகள்.
தமிழ்நாட்டில் உள்ள பிரபல அம்மன்கள், அவர்களது கோவிலை மையமாக கொண்டும், அவர்களின் பக்தர்களை மையமாக கொண்டும் நிறைய படங்கள் வந்து கொண்டிருந்தது. தொலைக்காட்சிகளின் வருகைக்கு பிறகு இது குறைந்து விட்டாலும் அவ்வப்போது, சாய்பாபா, அய்யப்பன் பற்றிய படங்கள் வந்தன. தற்போது 'மூக்குத்தி அம்மன்' படம் தயாராகி வருகிறது.
இந்த அம்மன் படங்களுக்கு முன்னோடி 1948ம் ஆண்டு வெளிவந்த 'மாரியம்மன்' படம். அம்மன் படங்களில் இது முதல் படம் என்றும் கூறலாம். இந்த படத்தை எல்.எஸ்.ராமச்சந்திரன் இயக்கி உள்ளார். பலவான்குடி சாமா இசை அமைத்துள்ளார். தஞ்சை ராமய்யா தாஸ் கதை, வசனம் எழுதி உள்ளார், பி.ஆர்.ராஜகோபாலய்யர் பாடல்களை எழுதி உள்ளார்.
டி.எஸ்.பாலையா, எஸ்.டி.சுப்பையா, கே.கே.பெருமாள், வி.வி.எஸ்.மணி, காளி என்.ரத்னம், எம்.இ.மாதவன், எம்.ஆர்.சந்தான லட்சுமி, டி.எஸ்.சகுந்தலா பத்மா, ஞானம், ஜெயா உள்ளிட்ட பலர்ட நடித்துள்ளனர். சேலம் பிலிம் கம்பெனி தயாரித்துள்ளது. இந்த படத்தின் பிரதிகள் எதுவும் இப்போது இல்லை. மாரியம்மன் ஒரு பெண்ணாக உருவெடுத்து வந்து தன் பக்தர்களுக்கு அருள்பாலித்த கதையாக இந்த படம் உருவாகி இருந்தது.