ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரோஜா. இயக்குனர் ஆர்.கே.செல்வமணியை 2002ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளார்கள். மேலும், ஆந்திராவிலுள்ள ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இடம் பெற்றுள்ள ரோஜா, அம்மாநிலத்தின் கடந்த ஆட்சி காலத்தில் அமைச்சராகவும் இருந்தார்.
இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரோஜா தனது கணவர் செல்வமணி குறித்து பேசியது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில், ''நான் வீட்டில் எப்போதுமே சண்டை போட்டுக் கொண்டே இருப்பேன். ஆனால் எனது கணவர் செல்வமணி சண்டை போட மாட்டார். அதையும் மீறி அவருக்கு கோபம் வந்தால் அந்த கோபத்தை என்னிடத்தில் காட்டாமல், தனது அறை கதவை மூடிக் கொள்வார். இதற்கு காரணம் அவர் பதிலுக்கு என்னைத் திட்டினால் நான் அழுவேன். அதன் பிறகு என்னை சமாதானப்படுத்த அவர் ரொம்ப கஷ்டப்பட வேண்டியதிருக்கும்'' என்று பேசிய ரோஜா, ''ஆண்கள் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தால் மனைவியிடம் தோற்று போங்கள். மனைவியிடம் சண்டை போட்டுக் கொண்டே இருந்தால் வெளியில் போய் வெற்றி பெற முடியாது'' என்றும் பேசி உள்ளார்.