ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை | மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? | லகான் கிராம மக்களுடன் அமர்ந்து ‛சிதாரே ஜமீன் பர்' படத்தை பார்த்த அமீர்கான் | பிளாஷ்பேக்: காட்சியும், கானமும் “நான் பாடும் பாடல்” | உழைக்கும் கரங்கள், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், பீஸ்ட் - ஞாயிறு திரைப்படங்கள் | சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் |
‛கங்குவா' படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‛ரெட்ரோ'. இப்படத்தில் சூர்யாவுடன் பூஜா ஹெக்டே, ஜெயராம், பிரகாஷ்ராஜ், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், நந்திதாதாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கேங்ஸ்டர் கலந்த காதல் கதையில் உருவாகி இருக்கும் இந்த படம் மே 1ம் தேதி திரைக்கு வருகிறது. அதனால் தற்போது இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தற்போது கார்த்திக் சுப்பராஜ் அளித்துள்ள ஒரு பேட்டியில், ரெட்ரோ படத்தின் கதை குறித்த ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அதில், ‛‛பேட்ட படத்திற்கு பிறகு ரஜினியை வைத்து படம் இயக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த ரெட்ரோ கதையை உருவாக்கினேன். இந்த கதை எழுதும்போது முழுக்க முழுக்க ஆக்சன் கதையாகதான் இருந்தது. ஆனால் அதையடுத்து சூர்யா கால்ஷீட் கிடைத்ததால் ரஜினிக்கு எழுதிய அதே கதையில் காதலை கலந்து ரெட்ரோவாக உருவாக்கினேன்'' என்று கூறியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.