பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு | ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை | மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? | லகான் கிராம மக்களுடன் அமர்ந்து ‛சிதாரே ஜமீன் பர்' படத்தை பார்த்த அமீர்கான் | பிளாஷ்பேக்: காட்சியும், கானமும் “நான் பாடும் பாடல்” | உழைக்கும் கரங்கள், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், பீஸ்ட் - ஞாயிறு திரைப்படங்கள் | சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் ‛ரெட்ரோ' படம் வருகிற மே ஒன்றாம் தேதி திரைக்கு வரும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் தற்போது பங்கேற்று வருகிறார் சூர்யா. இந்நிலையில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. அப்போது அதில் கலந்து கொண்ட சூர்யா, ரெட்ரோ படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரக்கூடிய கதையில் உருவாகி இருக்கிறது என்று பேசியவர், தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடித்து வரும் தனது 45வது படத்தை அடுத்து வெங்கி அட்லூரி இயக்கத்தில் தான் நடிக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்.
வருகிற மே மாதம் ஹைதராபாத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் அறிவித்துள்ள சூர்யா, ரெட்ரோ படம் வெளியாகும் அதே மே ஒன்றாம் தேதி திரைக்கு வரும் நானியின் ‛ஹிட் -3' படமும் வெற்றி பெற தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். சூர்யாவின் இந்த அறிவிப்பு மூலம் வெற்றிமாறன் இயக்கத்தில் அவர் நடிக்க இருக்கும் ‛வாடிவாசல்' மீண்டும் தள்ளிப் போவது தெரிய வந்துள்ளது.