ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மகேஷ்பாபு. தற்போது ராஜமவுலி இயக்கத்தில் தனது 29வது படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். சினிமாவில் மட்டுமல்லாது விளம்பரப் படங்களிலும் நடிப்பவர் மகேஷ்பாபு.
ரியல் எஸ்டேட் விளம்பரப் படம் ஒன்றில் நடித்த மகேஷ்பாபு அதற்காக பெற்ற சம்பளம் குறித்த விசாரணை தற்போது அமலாக்கத்துறையில் நடந்து வருகிறது. அங்கீகரிக்கப்படாத மனைகளை விற்று மக்களை ஏமாற்றியதாக, அந்த நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. அப்போது மகேஷ்பாபு விளம்பரப் படத்தில் நடித்தற்காக பெற்ற சம்பளமும் விசாரணை வளையத்தில் சிக்கியது. அந்த நிறுவனத்திடமிருந்து அவர் எந்த விதத்தில் சம்பளம் பெற்றார் என்பதைத் தெரிவிக்க, அவருக்கு நேரில் ஆஜராக அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி அவர் இன்று ஆஜராக வேண்டும்.
ஆனால், தனக்கு கூடுதல் அவகாசம் தரும்படி மகேஷ்பாபு பதில் கடிதம் எழுதியுள்ளாராம். வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருப்பதுதான் அதற்குக் காரணம் என சொல்லியிருப்பதாகத் தெரிகிறது.