தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு | ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை | மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? | லகான் கிராம மக்களுடன் அமர்ந்து ‛சிதாரே ஜமீன் பர்' படத்தை பார்த்த அமீர்கான் | பிளாஷ்பேக்: காட்சியும், கானமும் “நான் பாடும் பாடல்” |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் 'ரெட்ரோ' திரைப்படம் உருவாகியுள்ளது. வரும் மே 1ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் தமிழகம் தாண்டி மற்றும் மாநிலங்களிலும் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் ஹைதராபாத்தில் இந்த படத்தில் தெலுங்கு பதிப்பிற்கான புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது.
இப்போதெல்லாம் அந்தந்த மொழிகளில் உள்ள பிரபல நடிகர்கள் இதுபோன்ற நிகழ்வுகளில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நட்பு பாராட்டி வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் விஜய் தேவரகொண்டா இந்த ரெட்ரோ பட விழாவில் கலந்து கொண்டார். இந்த விழாவில் அவர் பேசும்போது தான் நடிகனாக வளர்வதற்கு சூர்யா எந்த அளவிற்கு ஒரு தூண்டுதலாக இருந்தார் என நினைவு கூர்ந்தார். அப்போது தொகுப்பாளர் அவரிடம் இந்த படம் பல வருடத்திற்கு முந்தைய காலகட்டத்தில் நடக்கும் நிகழ்வாக எடுக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு அப்படி பழைய காலத்திற்கு செல்ல வேண்டுமென்றால் யாரை சந்திப்பீர்கள் என்ன செய்வீர்கள் என்று கேட்டார்.
பொதுவாக இதுபோன்ற கேள்விக்கு எல்லோரும் மகாத்மா காந்தியை சந்திப்பேன்,. சுபாஷ் சந்திர போஸை சந்திப்பேன் என்று தானே கூறுவார்கள் ? ஆனால் விஜய் தேவரகொண்டா வித்தியாசமாக, “நான் சமீபத்தில் பாலிவுட்டில் வெளியான 'சாவா' திரைப்படத்தை பார்த்தேன். அதில் அவுரங்கசீப்பின் செயல்பாடுகளை பார்த்தபோது, எனக்கு மட்டும் கால எந்திரத்தில் பின்னோக்கி செல்லும் வாய்ப்பு கிடைத்தால் ஆங்கிலேயர் காலத்திற்கு சென்று பிரிட்டிஷ்காரர்களுக்கு இரண்டு அறை கொடுக்க வேண்டும். அது மட்டுமல்ல அவுரங்கசீப்புக்கும் அதேபோல இரண்டு அறை கொடுக்க வேண்டும். அந்த அளவிற்கு எனக்கு கோபம் இருக்கிறது. எனக்கு வரலாற்று காலத்திற்கு பின்னோக்கிப் போக வாய்ப்பு கிடைத்தால் என்னிடம் இது போன்று அறை வாங்குவதற்கான ஆட்களின் பட்டியலே நிறைய இருக்கிறது” என்று கொஞ்சம் நகைச்சுவை கலந்தும் பேசி பார்வையாளர்களை சிரிக்க வைத்தார் விஜய் தேவரகொண்டா.