ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கடந்த 2023ம் ஆண்டில் ஷாருக்கான் நடிப்பில் பதான், ஜவான், டங்கி என மூன்று படங்கள் வெளியாகி வெற்றி பெற்றன. இந்த நிலையில் அடுத்தபடியாக கிங் என்ற படத்தில் மே 18ம் தேதியிலிருந்து நடிக்கப் போகிறார் ஷாருக்கான். ஆக்ஷன் கதையில் உருவாகும் இந்த படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்குகிறார். அபிஷேக் பச்சன் வில்லனாக நடிக்கிறார். 2023ம் ஆண்டில் இந்த படத்தில் நடிக்க ஷாருக்கானை ஒப்பந்தம் செய்தபோது தீபிகா படுகோனேவை தான் ஹீரோயினாக நடிக்க வைக்க முடிவு செய்தார்களாம். அதன்பிறகு அவர் கர்ப்பமாக இருந்ததால் ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்திருந்த நயன்தாராவை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார்கள். ஆனால் கிங் படம் 2024ல் திட்டமிட்டபடி தொடங்காமல் இப்போது 2025, மே மாதம் தொடங்குவதால் தீபிகா படுகோனேவும் குழந்தை பிறந்து மீண்டும் நடிக்க தொடங்கி விட்டார். அதனால் முதலில் திட்டமிட்டபடி தீபிகா படுகோனேவையே கிங் படத்தின் கதாநாயகி ஒப்பந்தம் செய்துள்ளார்கள். இதனால் நயன்தாராவுக்கு கிடைக்க இருந்த வாய்ப்பு நழுவி சென்றுள்ளது. இந்த படத்தை அடுத்த ஆண்டு இறுதியில் வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளது.