தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

மதுரை வந்த விஜய்க்கு ரசிகர்கள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். முன்னதாக ''மதுரையில் ரசிகர்கள் யாரும் எனது வாகனத்தை பின் தொடர வேண்டாம்'' என விஜய் கூறியுள்ளார். ஆனால் அதை ரசிகர்கள் கேட்கவில்லை.
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய், கொடைக்கானலில் நடக்கும் ஜனநாயகன் படப்பிடிப்புக்காக மதுரைக்கு விமானத்தில் வந்தார். பின்னர் அங்கிருந்து கொடைக்கானலுக்கு காரில் செல்கிறார். முன்னதாக விஜய் வருவதை அறிந்த ஏராளமான ரசிகர்கள் காலை முதலே மதுரை விமான நிலையத்தில் கூடினர்.
முன்னதாக மதுரை செல்ல சென்னை விமான நிலையம் வந்த விஜய் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். த.வெ.க., கட்சி துவக்கிய பிறகு விஜய் நிருபர்களை சந்திப்பது இது முதல் முறையாகும்.
அப்போது விஜய் கூறியதாவது: மதுரை மக்களுக்கு என்னுடைய வணக்கம். எனது வேலைக்காக, ஜனநாயகன் படப்பிடிப்புக்காக நான் செல்கிறேன். கூடிய சீக்கிரம் மதுரை மண்ணில், கட்சி சார்பாக வேறு ஒரு சந்தர்ப்பத்தில் உங்களை சந்திக்கிறேன். ஒரு மணி நேரத்தில் நான் என் வேலையை பார்க்க போகிறேன். நீங்களும் பாதுகாப்பாக உங்கள் வீட்டிற்கு செல்லுங்கள்.
மதுரையில் என்னுடைய வேன், கார் பின்னாடி யாரும் பின் தொடர வேண்டாம். பைக்கில் வேகமாக வருவது, ஹெல்மெட் இல்லாமல் செல்வது, டூவீலர் மேல் நின்று பயணிப்பது போன்று வராதீர்கள். இதனை பார்ப்பது மனதிற்கு கஷ்டமாக உள்ளது. மதுரை விமான நிலையத்தில் இதனை சொல்ல முடியாது. சூழ்நிலை எப்படி இருக்கும் என தெரியவில்லை. இவ்வாறு விஜய் கூறினார்.
மதுரையில் வரவேற்பு
மதுரை சென்ற நடிகர் விஜய்க்கு, விமான நிலையத்தில் இருந்து திறந்த வேனில் வந்தார். அவர் மீது தொண்டர்கள் மலர்களை தூவி வரவேற்பு அளித்தனர். ரசிகர்களின் வரவேற்பை ஏற்றபடி சென்றார்.
சொல் பேச்சு கேட்காத ரசிகர்கள்
விஜய்யின் வருகையின் போது, மதுரை விமான நிலையத்தில் குவிந்த த.வெ.க.,வினர் மற்றும் ரசிகர்கள் தடுப்புகளை சேதப்படுத்தியதால் பரபரப்பு நிலவியது. மேலும், விஜய்யின் வேண்டுகோளை நிராகரித்து, கொடைக்கானல் செல்லும் அவரது வாகனத்தை ரசிகர்கள் பின்தொடர்ந்து சென்றனர்.