ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நேற்றைய தினம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான ரெட்ரோ திரைப்படம் வெளியானது. 80களின் காலகட்ட பின்னணியில் உருவாகியுள்ள இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், சூர்யாவிற்கு ஒரு கம்பேக் என்று சொல்லும் விதமாக அமைந்துள்ளது என்றே ரசிகர்களும் விமர்சகர்களும் கூறி வருகிறார்கள்.
இன்னொரு பக்கம் நடிகர் நானி நடிப்பில் தெலுங்கில் உருவாகியுள்ள ஹிட்-3 என்கிற படமும் நேற்று வெளியானது. இந்த படங்கள் ஹிந்தி மொழியில் வெளியானாலும் கூட இதன் ஹிந்தி பதிப்புகள் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் திரையிடப்படவில்லை. காரணம் ஓடிடி நிறுவனங்களுடன் இந்த படங்கள் செய்து கொண்ட ஒப்பந்தம் தான்.
அதாவது படம் வெளியாகி 28 நாட்கள் வரை படங்களை ஓடிடிக்கு கொடுக்கக் கூடாது என்கிற நிபந்தனையை மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் கடைபிடித்து வருகின்றன. ஆனால் இந்த இரண்டு படங்களும் 28 நாட்களுக்கு முன்பாகவே இந்த படங்களை ஓடிடியில் வெளியிடலாம் என்று ஒப்பந்தம் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாகத்தான் இந்த இரண்டு படங்களின் ஹிந்தி பதிப்புகளை மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் திரையிடவில்லை என்று தெரியவந்துள்ளது.