தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

தமிழ் சினிமாவில் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பாக டாப் காமெடி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் சந்தானம். டிவியில் நகைச்சுவை நிகழ்ச்சிகளில் நடித்தும், தொகுத்தும் வழங்கி வந்த சந்தானத்தை 2004ல் வெளிவந்த 'மன்மதன்' படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகம் செய்தவர் சிம்பு. அதன்பின் தனது நகைச்சுவை நடிப்பு மூலமாக கொஞ்சம் கொஞ்சமாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் சந்தானம்.
குறுகிய காலத்திலேயே பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார். அதன்பின் அவருக்கும் கதாநாயகனாக நடிக்கும் ஆசை வந்தது. நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி பத்து வருடங்களுக்குப் பிறகு அவர் கதாநாயகனாக நடித்த 'வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்' படம் வெளிவந்தது. சுமாரான வரவேற்பை அந்தப் படம் பெற்றாலும் தொடர்ந்து கதாநாயகாக மட்டுமே நடிப்பேன் என்பதில் பிடிவாதமாக இருந்தார் சந்தானம். முன்னதாக காமெடி நடிகராக நடிக்க ஒப்புக் கொண்ட சில படங்கள் அடுத்தடுத்து வெளிவந்தன.
தில்லுக்கு துட்டு, தில்லுக்கு துட்டு 2, பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலோனா, டிடி ரிட்டர்ன்ஸ், வடக்குபட்டி ராமசாமி ஆகிய சில படங்கள் அவரது கதாநாயகப் படங்களில் வரவேற்பைப் பெற்ற படங்களாக இருந்தது. தற்போது நாயகனாக நடித்துள்ள 'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' படம் மே 16ம் தேதி வெளியாக உள்ளது.
இதனிடையே, சிம்பு அடுத்து நடிக்க உள்ள படத்தில் சந்தானம் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கும் அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு வெளியானது. ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் இப்படத்தின் பூஜை இன்று(மே 3) சென்னையில் நடைபெற்றது. சிம்பு, கயாடு லோஹர் ஆகியோர் நாயகன் நாயகியாக நடிக்கிறார்கள். சாய் அபயங்கர் படத்திற்கு இசையமைக்கிறார்.
தனது கதாநாயகக் கொள்கையை, தன்னை அறிமுகப்படுத்திய சிம்புவுக்காக விட்டுக் கொடுத்து இப்படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார் சந்தானம். இருவரும் இணைந்து எடுத்த புகைப்படங்கள் இருவரது ரசிகர்களிடத்திலும் மகிழ்வைத் தந்துள்ளன. அது போல படமும் தரும் என எதிர்பார்ப்போம்.