வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் |

ஆந்திர மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண், துணை முதல்வராகப் பதவியேற்பதற்கு முன் மூன்று தெலுங்குப் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். 'ஹரிஹர வீர மல்லு, ஓஜி' ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்புகள் அப்போது நடந்து வந்தது. கடந்த வருடம் சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு அப்படங்களில் நடிப்பதைத் தள்ளிப் போட்டார்.
பின்னர் 'ஹரிஹர வீர மல்லு' படத்தில் கலந்து கொண்டு நடித்தார். பிறகு அரசுப் பணிகள் நிறைய இருந்ததால் படப்பிடிப்பை மீண்டும் தள்ளி வைத்தார். அவர் சில நாட்கள் நடித்துக் கொடுத்தால் படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்ற நிலை இருந்தது. இன்று முதல் அப்படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடிக்க ஆரம்பித்துள்ளார். இன்னும் நான்கைந்து நாட்கள் படப்பிடிப்பு நடக்க உள்ளதாகத் தெரிகிறது. அத்துடன் படப்பிடிப்பு முடிவடைவதால் படத்தை மாதக் கடைசியில் வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம்.
இப்படத்தை ஏற்கெனவே மே 9 வெளியீடு என அறிவித்திருந்தார்கள். இப்படத்தை முடித்த பிறகு அவர் 'ஓஜி' படத்தில் நடிக்கத் தேதி கொடுக்க வேண்டும். கடந்த இரண்டு வருடங்களாக இப்படத்தின் படப்பிடிப்பு நின்று நின்று நடந்து வருகிறது. அவர் 25 நாள் தேதி தந்தால் படத்தை முடித்துவிடுவார்களாம். அது விரைவில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்தால் 'ஓஜி' படமும் இந்த வருடத்தில் வெளியாகிவிடும்.