தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

சினிமாவில் அறிமுகமாகும்போது எல்லா நடிகைகளும் நான் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்பார்கள். ஆனால் காலப்போக்கில் நடிக்க ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் அபூர்வமாக ஒரு சில நடிகைகளே சொன்ன சொல்லை கடைசிவரை காப்பாற்றி இருக்கிறார்கள். அவர்களில் முக்கியமானவர் சுஜாதா. சுஜாதாவின் இயற்பெயர் விஜயலட்சுமி. அப்பா சங்கர மேனன், ரொம்பவே ஆச்சாரமான குடும்பம். அதனால் சுஜாதா சினிமாவில் நடிக்கவே கூடாது என்று கூறிவந்தார் தந்தை. சுஜாதாவிற்கும் சினிமாவில் நடிக்க விருப்பம் இல்லை.
சுஜாதாவின் அண்ணன் கோபிநாத் சினிமாவில் நடிக்க முயற்சி செய்து வந்தார். அப்போது அவர் போலியோ நோயால் பாதிக்கப்பட்டதால் நடிக்கவில்லை. அதனால் தனது தங்கை சுஜாதாவை சினிமாவில் நடிக்க வைத்து பெரிய நடிகையாக்க விரும்பினார். அவரது முயற்சியால் மலையாள படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
முதல் படம் 'தபஸ்வினி'. இதில் விதவையாக சோகமான கேரக்டரில் நடித்தார். இந்த படத்தில் நடித்ததாலோ என்னவோ அவர் நடித்த 40 மலையாள படங்களிலும் சோகமான கேரக்டர்களிலேயே நடித்தார். 1974ல் 'அவள் ஒரு தொடர்கதை' மூலம் தமிழுக்கு வந்தார். அதிலும் சோகமான கேரக்டர்தான்.
'அன்னக்கிளி, அவர்கள், அந்தமான் காதலி, ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது, சந்திப்பு, தீர்ப்பு, திருப்பம், நூல்வேலி, பூந்தளிர், மயங்குகிறாள் ஒரு மாது, விதி' என விதவிதமான கேரக்டர்களில் நடித்தார். முத்துராமன், ஜெய்சங்கர், சிவகுமார், விஜயகுமார், ரஜினி, கமல் என எல்லா முன்னணி நடிகர்களுடனும் நடித்தார். ஒரு கட்டத்தில் யார்யாருக்கெல்லாம், ஜோடியாக நடித்தாரோ அவர்களுக்கெல்லாம் அம்மாவாக நடித்தார். சுஜாதா நடித்த கடைசி படம் 'வரலாறு'. இதில் அஜித்தின் அம்மாவாக நடித்தார். தென்னிந்திய மொழிகளில் 100 படங்களுக்கு மேல் நடித்த சுஜாதா, எந்த படத்திலும் கவர்ச்சியாக நடிக்கவில்லை. பெரும்பாலும் சோக கேரக்டர்களிலேயே நடித்தார்.