ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாரதிராஜா இயக்கிய 'தெக்கத்திப் பொண்ணு' டி.வி தொடர் மூலம் பிரபலமானவர், பெருமாயி. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்த அன்னம்பாரிபட்டியை சேர்ந்தவர். ஏராளமான படங்களில் கிராமத்து பாட்டியாக, அப்பத்தாவாக நடித்தார். 'மனம் கொத்திப் பறவை, வில்லு, தண்டட்டி' ஆகியவை அவர் நடித்த முக்கியமான படங்கள்.
73 வயதான பெருமாயி கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவு காரணமாக நடிக்காமல் இருந்தார். இந்த நிலையில் பெருமாயி நேற்று வீட்டில் மயங்கி விழுந்தார். குடும்பத்தினர் அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். பெருமாயிக்கு ஒரு மகனும், மூன்று மகள்களும் உள்ளனர்.