சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
ஏ.பி.நாகராஜன்தான் மாயாஜாலங்கள் நிறைந்த பேண்டசி படங்களின் தந்தை. அன்றைக்கு இருந்த குறைந்தபட்ட தொழில்நுட்பத்தை வைத்துக் கொண்டு அவர் ரசிகர்களை மிரட்டினார். ஆனால் அதற்கு முன்னோடியான படம் 'வேதாள உலகம்'. 1948ம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தை ஏவிஎம் மெய்யப்ப செட்டியார் தயாரித்து, இயக்கினார். முழு படத்தையும் காரைக்குடியில் இருந்த ஏவிஎம் ஸ்டூடியோவில் ஷெட் போட்டு படமாக்கினார்.
வழக்கறிஞராகவும், நீதிபதியாகவும் இருந்த பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய கதைதான் 'வேதாள உலகம்'. இதனை ப.நீலகண்டன் திரைக்கதையாக எழுதினார். பேய் தேசத்தை ஆளும் சக்தி கொண்ட புத்தகத்தைப் பற்றிய இந்த கற்பனைக் கதை பார்வையாளர்களுக்கு முற்றிலும் ஒரு மாறுபட்ட புதிய அனுபவத்தை கொடுத்தது. இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் விளிம்பில் இருந்த மக்களின் மனதில் உற்சாகத்தையும் பரப்பும் விதத்தில் படமாக்கப்பட்டு இருந்தது. முழுப் படமும் கறுப்பு -வெள்ளை நிறத்தில் இருந்தபோதும், கடைசி காட்சிக்கு வண்ணம் தீட்டப்பட்டது. இது பார்வையாளர்களுக்கு 'கட்டாயம் பார்க்க வேண்டிய' படமாக அமைந்தது.
டி.ஆர்.மகாலிங்கம், கே.சாரங்கபாணி, மங்கலம், கே.ஆர்.செல்லம் மற்றும் சி.டி.ராஜகாந்தம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இப்படம் ஆகஸ்ட் 11ம் தேதி 1948ம் ஆண்டு வெளியாகி அந்த காலகட்டத்திலேயே வணிக ரீதியாக மாபெரும் வெற்றி பெற்ற ஒரு படமாக அமைந்து. பிற்காலத்தில் 'மை டியர் குட்டிச் சாத்தான்' புதிய தொழில்நுட்பத்தால் மிகப் பெரிய வசூலை பெற்றதைப்போன்று இந்த படம் அன்றைக்கு பெரிய வசூலை பெற்றது. இந்த படத்தின் லாபத்தில்தான் மெய்யப்ப செட்டியார் சென்னையில் ஏவிஎம் நிறுவனத்தை தொடங்கினார்.