ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்து கடந்த வருடம் வெளிவந்து பெரும் வசூலைக் குவித்த படம் 'புஷ்பா 2'. அப்படத்தின் பிரிமியர் காட்சி ஐதராபாத் சந்தியா தியேட்டரில் நடந்த போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் பெண் ஒருவர் மரணம் அடைந்தார். அவரது மகன் ஸ்ரீதேஜ் நெரிசலில் சிக்கி கடும் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த ஐந்து மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீதேஜ் குணமடைந்து வருவதால் அவரை மறுவாழ்வு மையம் ஒன்றில் சில நாட்கள் தங்கியிருக்க மருத்துவர்கள் கூறியிருந்தனர். அங்கு மாற்றப்பட்ட சிறுவன் ஸ்ரீதேஜை அல்லு அர்ஜுனின் அப்பா தயாரிப்பாளர் அல்லு அர்விந்த் நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார்.
“ஸ்ரீதேஜ் குணமடைய எங்களது மொத்த குடும்பமும் காத்திருக்கிறது. நாளுக்கு நாள் ஸ்ரீதேஜ் குணமடைந்து வருவதைப் பார்க்கும் போது நிறைவாக உள்ளது,” என அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீதேஜின் சிகிச்சைக்காக அல்லு அர்ஜுன் தரப்பும், புஷ்பா 2 தயாரிப்பாளர் தரப்பும் 2 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியிருந்தார்கள்.
மருத்துவமனையிலிருந்து வந்தாலும் மற்றவர்களை நினைவு கூறும் அளவிற்கு ஸ்ரீதேஜ் இன்னும் முழுமையாக குணமடையவில்லை என்பது மருத்துவமனை டாக்டர்கள் தகவல்.