ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
உலகம் சுற்றும் வாலிபி என்ற பட்டத்தை நயன்தாராவுக்கு தாராளமாக வழங்கலாம். அடிக்கடி வெளிநாடு செல்வது அவருக்கு பிடித்தமான விஷயம். பல நாடுகளுக்கு அவர் தனியாக காதலனுடன், குழந்தைகளுடன் சென்று வந்துவிட்டார். லேட்டஸ்ட்டாக பாரிஸ் சென்று இருக்கிறார். அந்த போட்டோக்களை வழக்கம்போல் சோஷியல் மீடியாவில் பதிவிட்டு இருக்கிறார்.
பொதுவாக, கணவருடன், குழந்தைகளுடன் இருக்கும் போட்டோக்களைதான் அவர் அதிகம் பதிவிடுவார். இந்த போட்டோவில் அவர்கள் மிஸ்சிங் என்பதால் சில நெகட்டிவ் கருத்துக்களை பரப்புகிறார்கள்.
மனதளவிலும் சில மாதங்கள் நயன்தாரா சோகத்தில் இருக்கிறாராம். காரணம் அவர் சினிமாவில் வெற்றி படம் கொடுத்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. முன்னணி நடிகர்கள் படங்களிலும் அவரை பார்க்க முடிவதில்லை. பெரும்பாலும் கதையின் நாயகியாகவே நடிக்கிறார். அதனால், இப்போதைக்கு எனக்கு தேவை ஒரு வெற்றி படம். அதற்கேற்ப நல்ல கதை, நல்ல டீம் அமைய வேண்டும். அந்த படத்தை நானே தயாரிக்க ரெடி. உடனடி தேவை வெற்றி என்று தோழிகளிடம் நயன்தாரா பீல் பண்ண வருகிறாராம்.