வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
பஹல்காம் மீதான பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை எடுத்தது. இது குறித்து இந்திய சினிமா பிரபலங்கள் பலரும் இந்திய ராணுவத்திற்கு தங்களது ஆதரவையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.
ஆந்திர மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த போது 'ஆபரேஷன் சிந்தூர்' பற்றி பதிவிடும் பிரபலங்களுக்கு எச்சரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளார்.
அவர் கூறுகையில், “தேசிய பாதுகாப்பை குறைத்து மதிப்பிடும்படியான கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும். பிரபலங்களும், சமூக வலைத்தளங்களில் பிரபலமாக உள்ளவர்களும் தங்களது பதிவுகளில் எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட வேண்டும். தேசத்திற்கு எதிரானதாகக் கருதப்படும் எந்தவொரு உள்ளடக்கமும் கடுமையான நடவடிக்கைக்கு வழிவகுக்கும்.
எல்லைகளைப் பாதுகாப்பது பற்றி ஏ,பி, சி தெரியாமல் ஆபரேஷன் சிந்தூர் பற்றி தெருக்களில் நாய்கள் குரைப்பது போல சமூக ஊடகங்களில் குரைக்காதீர்கள். பிரபலங்கள் அறிக்கைகளை வெளியிடுவதற்கு முன்பு தகவல்களைச் சரிபார்க்க வேண்டும். கவனக்குறைவான அல்லது தவறான தகவல் பதிவுககளைப் பரப்பி முக்கியமான காலங்களில் தேசிய ஒற்றுமையைக் குலைக்கக் கூடாது'' என்று தெரிவித்துள்ளார்.