படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

பஹல்காம் மீதான பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை எடுத்தது. இது குறித்து இந்திய சினிமா பிரபலங்கள் பலரும் இந்திய ராணுவத்திற்கு தங்களது ஆதரவையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.
ஆந்திர மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த போது 'ஆபரேஷன் சிந்தூர்' பற்றி பதிவிடும் பிரபலங்களுக்கு எச்சரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளார்.
அவர் கூறுகையில், “தேசிய பாதுகாப்பை குறைத்து மதிப்பிடும்படியான கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும். பிரபலங்களும், சமூக வலைத்தளங்களில் பிரபலமாக உள்ளவர்களும் தங்களது பதிவுகளில் எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட வேண்டும். தேசத்திற்கு எதிரானதாகக் கருதப்படும் எந்தவொரு உள்ளடக்கமும் கடுமையான நடவடிக்கைக்கு வழிவகுக்கும்.
எல்லைகளைப் பாதுகாப்பது பற்றி ஏ,பி, சி தெரியாமல் ஆபரேஷன் சிந்தூர் பற்றி தெருக்களில் நாய்கள் குரைப்பது போல சமூக ஊடகங்களில் குரைக்காதீர்கள். பிரபலங்கள் அறிக்கைகளை வெளியிடுவதற்கு முன்பு தகவல்களைச் சரிபார்க்க வேண்டும். கவனக்குறைவான அல்லது தவறான தகவல் பதிவுககளைப் பரப்பி முக்கியமான காலங்களில் தேசிய ஒற்றுமையைக் குலைக்கக் கூடாது'' என்று தெரிவித்துள்ளார்.