ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தற்போது தெலுங்கில் 'சுபம்' என்ற படத்தை தயாரித்திருக்கிறார் சமந்தா. இதையடுத்து தான் நடிக்கும் 'மா இண்டி பங்காரம்' படத்தையும் தயாரித்து நடிக்கப் போகிறார். இந்த நிலையில் 'புஷ்பா-2' படத்திற்கு பிறகு அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை அட்லி இயக்குவதாக செய்திகள் வெளியானதில் இருந்தே, அந்த படத்தில் சமந்தாவும் மூன்று நாயகிகளில் ஒரு நாயகியாக நடிப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன.
இந்த நிலையில் தற்போது அது குறித்த ஒரு கேள்விக்கு சமந்தா பதிலளிக்கையில், ''அட்லியும் நானும் சில படங்களில் இணைந்து பணியாற்றி இருக்கிறோம். எதிர்காலத்திலும் இணைந்து பணியாற்ற போகிறோம். என்றாலும் தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் அவர் இயக்கும் படத்தில் நான் இடம் பெறவில்லை'' என்று தெரிவித்திருக்கிறார் சமந்தா.