ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை ராணுவம் எடுத்து வருகிறது. அதோடு மத்திய அரசு பாகிஸ்தான் சார்ந்த பல்வேறு விஷயங்களுக்குத் தடை விதித்தும் வருகிறது. அதனடிப்படையில் பாகிஸ்தான் சார்ந்த நிகழ்ச்சிகள், வெப்சீரிஸ், பாடல்கள், பேட்டிகள் ஆகியவற்றை தேசிய பாதுகாப்பு கருதி உடனடியாக நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் பயங்கரவாதத்திற்கு எதிரான 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கு சினிமா, டிவி உள்ளிட்ட கலைஞர்கள் பெரும் ஆதரவு அளித்து வருகிறார்கள். தமிழ் சினிமா பிரபலங்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏஆர் ரகுமான் உள்ளிட்ட பலரும் இது குறித்த தங்களது ஆதரவையும் பாராட்டுக்களையும் ஏற்கெனவே தெரிவித்துள்ளார்கள்.
பாகிஸ்தான் சார்ந்த சமூக வலைத்தளங்கள் பலவற்றிற்கும் ஏற்கெனவே இந்தியாவில் தெரியாதவாறு நீக்கம் செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து ஓடிடி தளங்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அதோடு சில செய்தி சேனல்களில் வெளியாகும் போலியான செய்திகளின் மீதும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.