கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா |
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை ராணுவம் எடுத்து வருகிறது. அதோடு மத்திய அரசு பாகிஸ்தான் சார்ந்த பல்வேறு விஷயங்களுக்குத் தடை விதித்தும் வருகிறது. அதனடிப்படையில் பாகிஸ்தான் சார்ந்த நிகழ்ச்சிகள், வெப்சீரிஸ், பாடல்கள், பேட்டிகள் ஆகியவற்றை தேசிய பாதுகாப்பு கருதி உடனடியாக நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் பயங்கரவாதத்திற்கு எதிரான 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கு சினிமா, டிவி உள்ளிட்ட கலைஞர்கள் பெரும் ஆதரவு அளித்து வருகிறார்கள். தமிழ் சினிமா பிரபலங்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏஆர் ரகுமான் உள்ளிட்ட பலரும் இது குறித்த தங்களது ஆதரவையும் பாராட்டுக்களையும் ஏற்கெனவே தெரிவித்துள்ளார்கள்.
பாகிஸ்தான் சார்ந்த சமூக வலைத்தளங்கள் பலவற்றிற்கும் ஏற்கெனவே இந்தியாவில் தெரியாதவாறு நீக்கம் செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து ஓடிடி தளங்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அதோடு சில செய்தி சேனல்களில் வெளியாகும் போலியான செய்திகளின் மீதும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.