ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் |

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி உள்ள படம் 'தக்லைப்'. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற மே 16ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இந்தியா - பாகிஸ்தான் போர் நடைபெற்று வருவதால் இசை வெளியீட்டு விழாவை தள்ளி வைத்துள்ளார் கமல்.
அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், 'கொண்டாட்டத்திற்கான நேரம் இதுவல்ல. மவுன ஒருமைப்பாட்டிற்கான நேரம் என நம்புகிறேன். புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும். மேலும் நாட்டின் பாதுகாப்புக்காக விழிப்புடன் இருந்து வரும் வீரர்கள் வீராங்கனைகள் மீது அமைதி எண்ணங்கள் செல்கிறது. நாட்டு மக்களாகிய நாமெல்லாம் ஒற்றுமையை வெளிப்படுத்தும் நேரம். இது கொண்டாட்டத்துக்கான நேரம் அல்ல, சிந்தனைக்கான நேரம்' என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் கமல்ஹாசன்.