ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிக்கும் “பைசன் காளமடான்” படம் அக்டோபர் 17, அதாவது தீபாவளி கொண்டாட்டமாக வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அனுபமா பரமேஸ்வரன், லால், பசுபதி, மற்றும் ரஜிஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். துணிவும் தைரியமும் நிறைந்த ஒரு விளையாட்டு வீரனின், ஆழமான கதையை சொல்ல வருகிறது என்று படக்குழு சிம்பிளாக கதை பற்றி கூறியுள்ளது.
உண்மையில் இது தென்மாவட்டத்தை சேர்ந்த ஒரு கபடி வீரரின் கதை. அந்த வீரரின் பெயர் கணேசன். இவர் துாத்துக்குடி மாவட்டம் மணத்தி என்ற ஊரை சேர்ந்தவர். மிகவும் கஷ்டப்பட்டு, நிறைய போராடி கபடி வீரர் ஆனார். பின்னர், தேசிய, ஆசிய அளவில் கபடி போட்டியில் பங்கு பெற்று பல வெற்றிகளை பெற்றவர். மின்வாரியத்தில் அவருக்கு வேலை கிடைத்தது. இந்திய அரசு மணத்தி கணேசனுக்கு அர்ஜூனா விருது வழங்கி கவுரப்படுத்தியது.
பைசன் படத்தில் சின்ன வயது மணத்தி கணேசனாக துருவ் நடிக்கிறார். சில மாதங்களாக துருவ்வுக்கு தென் மாவட்டத்தில் மணத்தி கணேசனே கபடி பயிற்சி அளித்து இருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு துாத்துக்குடி மாவட்டம் வெள்ளப் பாதிப்பில் தத்தளித்தபோது, அந்த ஏரியா எம்பியான கனிமொழியிடம் மணத்தி கணேசன் உதவி கேட்டு பீல் பண்ணி வீடியோவும் அப்போது வைரலானது குறிப்பிடத்தக்கது.