ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
ஆர்.பி.டி மணி என்கிற புகழ்பெற்ற கராத்தே மாஸ்டர் சினிமாவிற்காக கராத்தே மணி ஆனார். 1944ம் ஆண்டு சென்னையில் பிறந்த மணி, சின்ன வயதிலிருந்தே தற்காப்புக் கலையான கராத்தேயில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்தார். இதனால் இவர் ஜப்பானின் முன்னணி கராத்தே ஆசிரியர்களிடம் முறையாக கராத்தே கற்றார்.
கராத்தேயில் கறுப்புப் பட்டை பெற்ற முதல் தமிழர். கராத்தேவின் உயர்ந்த பட்டமான 'ரென்ஷி' பட்டத்தையும் இவர் பெற்றார். பின் இவர் 1965ம் ஆண்டு சென்னையில் முதல் கராத்தே பயிற்சி பள்ளியை துவக்கினார். அதோடு டோக்கியோ கராத்தே பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார்.
பல சினிமா வாய்ப்புகள் வந்தும் மறுத்து வந்த மணி ரஜினியின் வேண்டுகோளை ஏற்று 'அன்புக்கு நான் அடிமை' படத்தில் வில்லனாக நடித்தார். அதன்பிறகு 'பில்லா ரங்கா' படத்தில் ரஜினிக்கு இணையான ஒரு கேரக்டரில் நடித்தார். ரஜினியின் நெருக்கமான நண்பராக மாறினார்.
தொடர்ந்து அஞ்சாத நெஞ்சங்கள், விடியும் வரை காத்திரு, அதிசய பிறவிகள், வளர்த்த கடா, தங்ககோப்பை, நீதிக்கு ஒரு பெண் போன்ற படங்களில் நடித்தார். பெரும்பாலும் வில்லன் வேடங்கள்தான்.
இப்படி வில்லனாக நடிப்பதால் அவரது கராத்தே பள்ளிகளுக்கு படிக்க வரும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. தனது வில்லன் இமேஜ் கராத்தே கலைக்கு இடையூறாக இருப்பதால் சினிமாவை விட்டு முற்றிலுமாக விலகி கராத்தே பள்ளிகளில் கவனம் செலுத்தினார்.
ஆனால் திடீரென தனது 50 வயதில் மரணம் அடைந்தார். அவரது மறைவிற்கு பல காரணங்கள் இன்று வரை சொல்லப்பட்டு வருகிறது.