ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ் சினிமாவில் சிறிய கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து, பின் நகைச்சுவை நடிகராக உயர்ந்து 'விடுதலை' படத்தின் மூலம் கதையின் நாயகனாக அடுத்த கட்டத்துக்குச் சென்றவர் சூரி. 'விடுதலை 2' மற்றும் 'கருடன்' ஆகிய படங்கள் அவருடைய நாயகன் அந்தஸ்தை இன்னும் கூடுதலாக்கியது.
அடுத்து அவர் நாயகனாக நடித்துள்ள 'மாமன்' படம் வரும் மே 15ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் கதையையும் சூரியே எழுதியுள்ளார். 'விலங்கு' வெப் சீரிஸ் மூலம் பரபரப்பாகப் பேசப்பட்ட பிரசாந்த் பாண்டிராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வந்த ஐஸ்வர்ய லெட்சுமி சூரி ஜோடியாக இப்படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தின் பட்ஜெட்டின் பெரும்பகுதி ஓடிடி, சாட்டிலைட் உரிமையிலிருந்தே கிடைத்துவிட்டதாம். 'விலங்கு' வெப் சீரிஸ் மூலம் பிரசாந்த் பாண்டிராஜ் ஜீ குழுமத்துடன் நெருக்கமாக உள்ளதால் அங்கேயே படத்தை விற்றுவிட்டார்களாம். அதன் விலை சுமார் 12 கோடி என கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள். இதன் மூலம் தனது படங்களின் வியாபாரத்திலும் சூரி முன்னேறியுள்ளார் என்பதை கோலிவுட்டில் ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள்.