பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு | ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை | மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? | லகான் கிராம மக்களுடன் அமர்ந்து ‛சிதாரே ஜமீன் பர்' படத்தை பார்த்த அமீர்கான் | பிளாஷ்பேக்: காட்சியும், கானமும் “நான் பாடும் பாடல்” | உழைக்கும் கரங்கள், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், பீஸ்ட் - ஞாயிறு திரைப்படங்கள் | சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் |
தமிழ் சினிமாவில் சிறிய கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து, பின் நகைச்சுவை நடிகராக உயர்ந்து 'விடுதலை' படத்தின் மூலம் கதையின் நாயகனாக அடுத்த கட்டத்துக்குச் சென்றவர் சூரி. 'விடுதலை 2' மற்றும் 'கருடன்' ஆகிய படங்கள் அவருடைய நாயகன் அந்தஸ்தை இன்னும் கூடுதலாக்கியது.
அடுத்து அவர் நாயகனாக நடித்துள்ள 'மாமன்' படம் வரும் மே 15ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் கதையையும் சூரியே எழுதியுள்ளார். 'விலங்கு' வெப் சீரிஸ் மூலம் பரபரப்பாகப் பேசப்பட்ட பிரசாந்த் பாண்டிராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வந்த ஐஸ்வர்ய லெட்சுமி சூரி ஜோடியாக இப்படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தின் பட்ஜெட்டின் பெரும்பகுதி ஓடிடி, சாட்டிலைட் உரிமையிலிருந்தே கிடைத்துவிட்டதாம். 'விலங்கு' வெப் சீரிஸ் மூலம் பிரசாந்த் பாண்டிராஜ் ஜீ குழுமத்துடன் நெருக்கமாக உள்ளதால் அங்கேயே படத்தை விற்றுவிட்டார்களாம். அதன் விலை சுமார் 12 கோடி என கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள். இதன் மூலம் தனது படங்களின் வியாபாரத்திலும் சூரி முன்னேறியுள்ளார் என்பதை கோலிவுட்டில் ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள்.