ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நெல்சன் இயக்கும் ஜெயிலர் 2 படப்பிடிப்பு மீண்டும் கேரளா கோழிக்கோட்டில் தொடங்கி உள்ளது. 20 நாட்கள் வரை அங்கே படப்பிடிப்பு நடக்கிறது. ரஜினி தனது போர்ஷனை முடித்துவிட்டு ஒரு வாரத்தில் சென்னை திரும்புவார் என தகவல். கண்டிப்பாக, ஆயிரம் கோடி வசூலை ஈட்ட வேண்டும் என்ற டார்க்கெட்டுடன் படப்பிடிப்பு நடக்கிறதாம். அதற்கான ஸ்கிரிப்ட் உருவாக்கப்பட்டுள்ளது.
ரஜினி தவிர, பாலகிருஷ்ணா, சிவராஜ்குமார் போன்ற மற்ற மொழி முன்னணி நடிகர்களும் நடிப்பதால் இந்த பட்ஜெட் சாத்தியம் என்று படக்குழு நினைக்கிறதாம். வில்லனாக பஹத்பாசில், எஸ்.ஜே.சூர்யா நடிப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் வழக்கமான மார்க்கெட் தவிர, புதிய ஏரியாவிலும், புதிய நாடுகளிலும் இந்த படத்தை பிஸினஸ் பண்ண இப்பவே ஏற்பாடுகள் நடக்கிறதாம்.
ரஜினியை பொறுத்தவரையில் நடிப்பில் மட்டுமே முழு கவனம் செலுத்துகிறாராம். பிஸினஸ், வரவு செலவில் தலையிடுவது இல்லை. தன் படத்தால் யாருக்கும் நஷ்டம் வரக்கூடாது என்று மட்டும் அடிக்கடி சொல்கிறாராம்.