ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
1976ம் ஆண்டு இதேநாளில் வெளிவந்த 'அன்னக்கிளி' தனது 49 வருடத்தை முடித்து இன்று முதல் பொன்விழாவில் அடி எடுத்து வைக்கிறது. தமிழ் சினிமாவின் மைல்கல்லை உருவாக்கிய தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம், கதை, திரைக்கதை, வசனம் எழுதிய செல்வராஜ், இசை சாம்ராஜ்யத்தை ஆரம்பித்த இளையராஜா ஆகியோருக்கு முதலில் வாழ்த்துக்கள்.
தான் நேசித்தவனுக்காக உயிரையே கொடுத்த ஒரு பெண்ணின் எளிய கதை தான் அன்னக்கிளி. அதை கிராமிய பின்னணியில் உருவாக்கி இருந்தார்கள் இயக்குனர்கள் தேவராஜ் - மோகன். ஹிந்தி பாடல்கள் கலக்கி கொண்டிருந்த காலத்தில் தமிழ் பாடல்களுக்கு குறிப்பாக, கிராமத்து இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டிருந்த பஞ்சு அருணாசலத்திற்கு அமைந்தார் ராசையா.
தி.நகரின் பேரூந்து நிலைய அருகிலுள்ள 'கிளப் ஹவுஸ்' ஓட்டலில் பஞ்சு அருணாசலத்தைச் சந்திக்க ராசய்யாவும், அவர் அண்ணன் பாஸ்கரும், வசனகர்த்தா செல்வராஜால் அழைத்து வரப்படுகிறார்கள். பஞ்சு அருணாசலத்தைச் சுற்றியுள்ளவர்களோ புதியவர்களை ஏற்கக் கூடாது எனத் தூபம் போடுகிறார்கள். 'மருத்துவச்சி', 'சூடிக் கொடுத்தாள்' போன்ற தலைப்புகளே படத்திற்காகத் தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில், ராசய்யா தன் ஹார்மோனியத்தில் 'அன்னக்கிளி உன்னைத் தேடுதே' என்று இசைக்க, அதையே தலைப்பாக்கினார் பஞ்சு. திறமைக்கு மதிப்பளித்து, ராசய்யாவை இளையராஜாவாக்கினார்.
சுஜாதா, சிவக்குமார், 'படாபட்' ஜெயலட்சுமி, ஸ்ரீகாந்த், 'தேங்கை' சீனிவாசன், எஸ்.வி.சுப்பையா, எஸ்.என்.லட்சுமி, மணிமாலா, 'வெண்ணிராடை' மூர்த்தி, ஆகியோர் நடித்தார்கள்.
எஸ்.பி. தமிழரசி தனது எஸ்.பி.டி பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரித்தார், கதை எழுதியவர் ஆர்.செல்வராஜ். திரைக்கதை, வசனம் மற்றும் பாடல் வரிகளை பஞ்சு அருணாச்சலம் எழுதினார். ஏ. சோமசுந்தரம் ஒளிப்பதிவு செய்தார். படத்தின் பெரும்பகுதியை உண்மையான கிராமப்புற இடங்களில் படமாக்கினார், கருப்பு வெள்ளையிலேயே வண்ணங்களை உருவாக்கினார்.
மாநில மொழிப்படத்திற்கான தேசிய விருது பெற்ற இப்படம், திரையிடப்பட்ட உடனேயே பெரும் வெற்றி வரவில்லை. அப்போது தமிழகம் முழுவதும் ஒலித்த இளையராஜாவின் பாடல்கள் மக்களை தியேட்டருக்கு எடுத்து வந்து அமர்த்தியது. பொன்விழா ஆண்டிற்கு வந்திருக்கும் அன்னக்கிளி அப்போது வெள்ளி விழா கொண்டாடினாள்.
அதேப்போல் அன்னக்கிளி படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜாவிற்கும் இது பொன்விழா ஆண்டு என்பது குறிப்பிடத்தக்கது.