தயாரிப்பாளர் ஆன ரவி மோகன் : புதிய தயாரிப்பு நிறுவனம் துவக்கம் | சூப்பர் ஹீரோ படத்திற்காக லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்க்கும் அமீர்கான் | 50 கோடி சம்பளத்தைக் குறைத்த பிரபாஸ் ? | மம்முட்டி இன்னும் மாறவே இல்லை : சிம்ரன் வியப்பு | பாலியல் வழக்குகள் மொத்தமாக முடித்து வைப்பு : பார்வதியின் கருத்துக்கு பெண் இயக்குனர் பதிலடி | தீ Vs சின்மயி - கடைசியில் இல்லாமல் போன 'முத்த மழை' | 'வாடிவாசல்' டிராப் ஆகிறதா? : மீண்டும் பரவும் தகவல் | புதிய காட்சிகளுடன், நாளை 'லால் சலாம்' ஓடிடி ரிலீஸ் | டாக்டராக நடிக்கும் டாக்டர் | தக் லைப் பர்ஸ்ட் ஷோ : படக்குழுவினர் புறக்கணிப்பா? |
சூப்பர் சிங்கர் ஜுனியர், இந்தியன் ஐடல் ஜுனியர் ஆகிய டிவி இசைப் போட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமானவர் நித்யஸ்ரீ வெங்கடரமணன். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பாடி வருகிறார். எந்த ஒரு பாடகர், பாடகிக்கும் இளையராஜா இசையில் பாட வேண்டும் என்பது பெரும் கனவாக இருக்கும். அப்படி ஒரு கனவு நித்யஸ்ரீக்கு நடந்து முடிந்துள்ளது.
இளையராஜா இசையில் உருவாகி வரும் மே 30ம் தேதி வெளியாக உள்ள 'சஷ்டிபூர்த்தி' தெலுங்குப் படத்தில் பாடியுள்ளார். 'ராத்ரன்த ரச்சே' என்ற அந்தப் பாடலில் இளையராஜாவின் மகன் யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைந்து பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சில தினங்களுக்கு முன்பு வெளியான இப்பாடல் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இளையராஜா இசையில் முதன் முதலில் பாடியது குறித்து, “ஒன் அன்ட் ஒன்லி மேஸ்ட்ரோ இளையராஜா சார் இசையில் எனது முதல் பாடல் 'சஷ்டிபூர்த்தி' படத்தில் ராத்ரன்த ரச்சே' பாடியுள்ளேன் என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். வாசுதேவ் அவர்களுக்கும் 'சஷ்டிபூர்த்தி' படக்குழுவினருக்கும் எனது சிறப்பு நன்றி.
காலத்தால் அழியாத சாதனையாளரின் பாடகி என எனது பெயரும் ஸ்க்ரோலிங் டைட்டிலில் செல்வதைப் பார்ப்பது எனது கனவு நனவான தருணம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.