சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
கடந்த 2023ல் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் 2 திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனை தொடர்ந்து அந்த படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக இருக்கிறது என்று அறிவிக்கப்பட்டது. தற்போது கூலி படத்தை முடித்து விட்ட ரஜினிகாந்த், ஜெயிலர் 2 படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். கோழிக்கோடு அருகே உள்ள செருவன்நூர் பகுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட 20 நாட்கள் இங்கே படப்பிடிப்பு நடைபெறும் என சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் கேரள மாநில சுற்றுலா துறை அமைச்சர் பிஏ முகமது ரியாஸ் ஜெயிலர் 2 படப்பிடிப்பு தளத்திற்கு நேரில் வருகை தந்து மரியாதை நிமித்தமாக ரஜினியை சந்தித்துள்ளார். ரஜினி உடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ள அமைச்சர் முகமது ரியாஸ், “நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி” என ரஜினியின் பஞ்ச் டயலாக்கையும் குறிப்பிட்டுள்ளார். இன்னும் சில தினங்களில் கோழிக்கோடு பகுதியில் படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்து பாலக்காட்டில் உள்ள அட்டப்பாடி பகுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற இருக்கிறது.