சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
மறைந்த நடிகர் விஜயகாந்த் இளைய மகன் சண்முகபாண்டியன் ஹீரோவாக நடித்துள்ள படை தலைவன் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், ‛ரமணா' பட அனுபவங்களை, அதில் நீண்ட புள்ளி விவர டயலாக்கை விஜயகாந்த் எப்படி 2 டேக்கில் ஓகே செய்தார் என்றும், அவர் பெருமைகளையும் உணர்ச்சிபூர்வமாக பேசினார்.
அப்போது சண்முக பாண்டியனை வைத்து ரமணா பார்ட்2வை எடுக்க தயார் என்றார். அது நடக்குமா என்று விசாரித்தால் ரமணா படத்தை தயாரித்தவர் ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன். அவர் தலைப்பு கொடுத்து, படத்துக்கு ஓகே சொன்னால் நடக்க வாய்ப்புள்ளது. அதற்கு முன்பு முருகதாசும் கதையை தயார் செய்ய வேண்டும். தகுந்த தயாரிப்பாளர் கிடைக்க வேண்டும்.
சண்முகபாண்டியன் மாமாவான எல்.கே.சுதீஷ் விஜயகாந்த்தை வைத்து பல படங்களை தயாரித்தார். அவர் ரமணா 2வை தயாரிக்கலாம் என்கிறார்கள். இப்போது வருத்தப்படாத வாலிபர் சங்கம் புகழ் பொன்ராம் இயக்கும் கொம்பு சீவி படத்திலும் நடித்து வருகிறார் சண்முக பாண்டியன்.