நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி நடிக்கும் தக்லைப் பட பாடல் வெளியீட்டு விழா, மே 24ம் தேதி சென்னையில் நடக்கிறது. இந்த விழாவில் யார் சிறப்பு விருந்தினர். மணிரத்னம், கமல், ஏ.ஆர்.ரகுமான் இணையும் படம் என்பதால், மிகப்பெரிய விஐபியே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பாடல்களை வெளியிட வாய்ப்பு என எதிர்பார்க்கப்படுகிறது.
2022ம் ஆண்டு நடந்த பொன்னியின் செல்வன் படவிழாவில் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, நான் பெரிய பழுவேட்டையராக நடிக்க ஆசைப்பட்டேன் என தொடங்கி, பல விஷயங்களை சுவாரஸ்யமாக பேசினார். அந்த பேச்சு படத்துக்கு பெரிய பப்ளிசிட்டியாக அமைந்தது.
இந்நிலையில் மே 24ல் ரஜினி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, படக்குழுவை வாழ்த்துவாரா என்று கேள்வி எழுந்துள்ளது. இப்போது ஜெயிலர் 2 படப்பிடிப்புக்காக கேரளாவில் இருக்கும் ரஜினிகாந்த் சில நாட்களில் சென்னை திரும்ப வாய்ப்புள்ளது. மணிரத்னம், கமல் அழைத்தால் அவர் மறுக்கமாட்டார்கள். ஆனால், அவர்கள் அழைப்பார்களா? அவர்கள் திட்டம் என்ன என்பது சஸ்பென்ஸ ஆக இருக்கிறது.